Skip to main content

Posts

Showing posts from October, 2021

கரூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

 பக்தர்கள் கடவுளுக்கு வழங்கிய நகைகளை உருக்குவது பக்தர்களின் இறை நம்பிக்கையை புண்படுத்தும், இந்து முன்னணியினர் கருத்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்குவது கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய பகுதிகளில் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார், நகர செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார், நகர செயலாளர் கோகுல், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆகியோர் பேசினர்  இதில் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி, பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ராஜேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செல்வம், மாவட்டச் செயலாளர் அரவை பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரிமுத்து அரசு தொடர்பு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் தீனதயாள் மற்றும் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்  நிறைவாக நகரச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். மேலும் கடவுளுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில...

1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் வெற்றி பொன் விழா கொண்டாட்டம், முன்னாள் ராணுவ வீரர்கள் தீர்மானம்.

 விஜய் திவஸ் பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாட முன்னாள் ராணுவ வீரர்கள் தீர்மானம். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க ஆலோசகர் சகாதேவன் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சந்திரன், கே.ரவி, கொங்கராம்பட்டு ஊராட்சி தலைவர் நாராயணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.செயலாளர் ரவி வரவேற்றார். இக்கூட்டத்தில் சங்க தலைவர் கேப்டன் லோகநாதன்  பேசியதாவது:-  பங்களாதேஷ் உருவாக காராணமாயிருந்த 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த போரில் 94ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தது இன்று வரை சரித்திர சாதனையாக போற்றப்படுகிறது. இந்த வெற்றி வருடந்தோறும் விஜய் திவஸ் என கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொன்விழா ஆண்டு என்பதால் சிறப்பாக கொண்டாட நம் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி போரில் பங்கேற்ற வீரர்கள், வீரமரணமடைந்த வீரர்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு மரியாதை செய்யவும், மாவட்ட ஆட்சி...

3500 க்கும் மேற்பட்ட கல்லூரி ஊழியர்களின் கோரிக்கைகள் 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முதல்வருக்கு கோரிக்கை

 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள்  தவிப்பு,முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 16 உறுப்புக்  கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 3500 மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் 10 ஆண்டுகளாக  நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள்  தவிப்பாக தவிக்கின்றனர் என்றும் இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.        சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கீழ்  இயங்கும்  மதுரை, திருநெல்வேலி, திண்டிவனம், திண்டுக்கல், ஆரணி, விழுப்புரம், பண்ருட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி ராமநாதபுரம், உள்பட 16 உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள்  என 3500.க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.      கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோ...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் அண்ணாமலையார் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்.

 இந்து கோவில்களில் தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு ஆன்மீக பக்தர்கள் ஆலயத்திற்கு தானமாக வழங்கிய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து இந்து முன்னணியின் தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலாளர் அருன்குமார் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர்கள் கௌதம், சிவா, ஒன்றியச் செயலாளர்கள் விஜயராஜ், சரவணன், ராமகிருஷ்ணன், காண்டீபன், பொதுச்செயலாளர் மஞ்சுநாதன், நகர தலைவர் செந்தில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். தமிழக அரசு கோயில் நகைகளை உருக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் ராஜகோபுரம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இறுதியில் ஒன்றிய செயலாளர் ராஜ் நன்றி கூறினார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசை கண்டித்து இந்து மு...

திருவண்ணாமலையில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் ஆலோசனைக்கூட்டம்.

 இல்லம் செல்வம் உள்ளம் வெல்வோம் ஆலோசனைக் கூட்டத்திற்கு பாஜக துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்  நிகழ்ச்சியின் மூலம் மத்திய பாஜக அரசின் சாதனை திட்டங்களை பாரதீய ஜனாத கட்சி தொண்டர்கள்  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில துனைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் இல்லம் செல்வம் உள்ளம் வெல்வோம் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்  முயற்சியாக பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கான ஆலோசனைக்கூட்டமாக திருவண்ணாமலையில்  நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துனைத்தலைவர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது பேசிய கருப்பு முருகானந்தம்   பாரத பிரதமர் நரேந்...

முன் களப் பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை, பாஜக மருத்துவ அணித் தலைவர் ராஜா ஹரிகோவிந்தன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

 பாஜக மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் முன்னிலையில் முன் களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் நல்லாட்சியில் உலகின் முதல் முறையாக 100 கோடி கரோனா  தடுப்பூசி  இலவசமாக மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மக்களை நோய் பிடியில் இருந்து காத்த காவல் தெய்வம் மகான் நரேந்திர மோடி அவர்கள் நன்றி தெரிவித்து இதற்காக அரும்பாடுபட்ட  மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.  திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்கள்   தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி தலைவர்  டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன்  முன்னிலையில் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்கள்.  உடன் மாவட்ட துணை...

பஞ்சமி நிலங்களை மீட்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என தலித் விடுதலை இயக்கம் எச்சரிக்கை.

தலித் விடுதலை இயக்கம் சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.  திருவண்ணாமலை மாவட்ட தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர்  என்.அமுல்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம்  தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர். கிச்சா, மகளிர் அணி தலைவர் தலித் நதியா உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் பெரணம்பாக்கம் கிராமம் சேர்ந்த சர்வே எண்.73/4பி-யில். என்ற இடத்தில் கடந்த சுமார் 65 ஆண்டுகாலமாக தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள 9 ஏக்கர் 80 சென்டு பஞ்சமி நிலத்தை தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீட்டெடுத்து தர வேண்டும்.  அதே பஞ்சமி நிலத்தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டு வரும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 65 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.  அதுபோக மீதம் உள்ள விவசாய நிலத்தை அதே பகுதியில் குடியிருந்து வரும்  அருந்ததியர் இன மக்களுக்கு பகிர்...

செவிலியருக்கு வாழ்த்து அட்டை வழங்கி சிறப்பித்த ஊராட்சி மன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ்

80% தடுப்பூசி போடப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மலமஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் மலமஞ்சனூர் ஊராட்சியில் மலமஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் 6வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரவி, செவிலியர் உஷா, ஊராட்சி செயலாளர் ராமன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், கூட்டுறவு விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 80 சதவிகிதம் தடுப்பூசி மலமஞ்சனூர் ஊராட்சியில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி பிரதமர் மோடி அவர்கள் செவிலியர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையை ஊராட்சிமன்ற தலைவர் சுதா கோவிந்தராஜ் அவர்கள் செவிலியர் உஷா அவர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்றைய தடுப்பூசி முகாமில் மொத்தம் 120 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்...

முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார்

 ராதாபுரம் ஊராட்சியில் 75% தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 100% தடுப்பூசி போட்ட ஊராட்சியாக மாற்ற செயல்பட்டுவரும் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார் அவர்கள் தலைமையில் 6வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பரிதா ரெஹானா, செவிலியர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், கூட்டுறவு விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 75 சதவிகிதம் தடுப்பூசி இந்த ஊராட்சியில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி பிரதமர் மோடி அவர்கள் செவிலியர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையை ஊராட்சிமன்ற தலைவர் அலமேலு குமார் அவர்கள் வழங்கி வாழ்த்தினார். இன்றைய தடுப்பூசி முகாமில் மொத்தம் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இல...

12 மாவட்ட பாஜக எஸ்.சி அணி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்

 பாஜக விழுப்புரம் பெருங்கோட்டத்தை சேர்ந்த எஸ்.சி அணி தலைவர்கள்  ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் பெருங்கோட்டத்தை சேர்ந்த 12 மாவட்ட எஸ்.சி அணி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்  N.L.நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக எஸ்.சி அணி மாநில பொறுப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் மௌரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக மாநில எஸ்.சி அணி துணைத் தலைவர் சண்முகபிரியன், மாநில துணைத்தலைவர் கஸ்தூரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரகு, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எஸ்.சி அணி மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொதுச்செயலாளர் விஜயராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் பாக்கியராஜ், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்...

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு 120 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை.

 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு 120 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை. திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இ.கா.ப., அவர்கள் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  உடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S.ராஜகாளிஷ்வரன் , மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.S.வெள்ளைத்துரை, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரன் சுருதி,இ.கா.ப, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் .D.குமார் , மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் M.சீனிவாசன்,  காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

குப்பநத்தம் அணையை திறந்த சட்டமன்ற உறுப்பினர் கிரி

 பாதுகாப்பு கருதி குப்பநத்தம் அணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் குப்பநத்தம்  பகுதியில் கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணை அதன் முழு கொள்ளளவான 59 அடியில் 57அடி நீர் தற்போது எட்டியுள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 100 கன அடியாக உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை மூலம் உபரி நீர் 100 கண அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அணையை திறந்து வைத்தார். மேலும் செய்யாற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் செங்கம் வட்டாச்சியர் முனுசாமி, பொது பணித்துறை AE கார்த்திகேயன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யூரியா தட்டுப்பாடு, பதுக்களை தடுக்க விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

 வேளாண் அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாத  சூழலில் தற்போது கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில்  யூரியா தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வேளாண் அலுவலகத்தில் யூரியா கிடைக்காததால் தனியார் கடைகளை நாடவேண்டிய சூழல் உள்ளது.  தனியார் கடைகளில் யூரியா வாங்கினால் குருணை  போன்ற இடுபொருள்கள் கூடுதலாக வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படும் என கட்டுப்பாடு விதிப்பதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர். யூரியா விலை ரூ.300 என்றால் வியாபாரிகள் கொடுக்கும் கூடுதல் பொருட்களின் விலை 1000 த்தை தாண்டுவதாக உள்ளதால் நடவு செய்த பயிரைக் காப்பாற்றுவது எப்படி என விழிபிதுங்கி நிற்கின்றனர் விவசாயிகள். எனவே வேளாண் அலுவலகம் மூலம் யூரியா வழங்குவதற்க்கும் தனியார் கடைகளில் யூரியா பதுக்கலை தடுக்க அரசு ...

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள சந்தோஷ் மொபைல் ஷாப் உடைக்கப்பட்டு, செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை, காவல் துறை விசாரணை திருவண்ணாமலை நகரம், அவலூர்பேட்டை ரோடு சத்யா பெட்ரோல் பங்க் எதிரில் ரமேஷ் என்பவர் சத்யா மொபைல் ஷாப் சுமார் 5 ஆண்டுகாலமாக நடத்தி வருகிறார்.  வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் காலையில் கடையை திறக்க வரும்போது கடை உடைக்கப்பட்டு கடையில் உள்ளே இருந்த அனைத்து மொபைல், பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.  சுமார் ரூ. 50 ஆயிரம் மேற்பட்ட பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது  சம்பந்தமாக மொபைல் போன் கடை உரிமையாளர் ரமேஷ் மற்றும் பிஜேபி அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர்  அருணகிரிநாதன் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான முறையில் அறிமுக விழா நடத்திய உலகப்புகழ் பாப் இசைப் பாடகர்.

 அனாமதேயத்தின் கடவுள் ' லார்ட் ஜெ' என்ற பாப் இசைப் பாடகர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தனது அறிமுக விழாவை  நடத்தினார். மலைகளெல்லாம் சிவவடிவம் என்பார்கள்.அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறையும் சிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டுபவர். அவரது பக்தராக விளங்கும் உலக அளவில் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ஒருவர் தனது அறிமுகவிழாவை திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்தார். அதன்படி அனாமதேயத்தின் கடவுள் ' லார்ட் ஜெ' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த பாப் இசைப் பாடகர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சடைசாமி ஆசிரமத்தின் முன்பு தனது அறிமுகவிழாவை இன்று நடத்தினார். இதனை முன்னிட்டு பாப் இசைப் பாடகர் படம் இடம் பெற்ற  பேனர்களுக்கு முன்பு பட்டாசு வெடித்து மலர்தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 300 சாமியார்களுக்கு அன்னதானம் மற்றும் தட்சணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சடைசாமி ஆசிரம ஆதீனம் திருப்பாத சுவாமிகள், சுவாமி நிர்மலானந்தா, ஆன்மீக சொற்பொழிவாளர் முத்துக்கிருஷ்ணன், அட்சயபாபா தியானசபை அறங்காவலர் சுவாமி சாயி ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர...

பிரதமரை கொலைகாரன் என்ற வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

 பிரதமரை கொலைகாரன் என்று பேசிய வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 13ஆம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சி காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு பாரதப்பிரதமர் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக கொலைகாரன் என்றும், திருடன் என்றும் ஒருமையில் பேசி அவமரியாதை செய்து உள்ளார். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை மரியாதை குறைவாக ஒருமையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரை அவதூறாகப் பேசி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், மத மோதல்களை தூண்டும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பேசி மரியாதைக்குரிய நாட்டின் பிரதமர் மீது வன...