ராதாபுரம் ஊராட்சியில் 75% தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 100% தடுப்பூசி போட்ட ஊராட்சியாக மாற்ற செயல்பட்டுவரும் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார் அவர்கள் தலைமையில் 6வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பரிதா ரெஹானா, செவிலியர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், கூட்டுறவு விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 75 சதவிகிதம் தடுப்பூசி இந்த ஊராட்சியில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி பிரதமர் மோடி அவர்கள் செவிலியர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையை ஊராட்சிமன்ற தலைவர் அலமேலு குமார் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.
இன்றைய தடுப்பூசி முகாமில் மொத்தம் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, மதியம் 12 மணி வரை 80 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment