Skip to main content

3500 க்கும் மேற்பட்ட கல்லூரி ஊழியர்களின் கோரிக்கைகள் 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முதல்வருக்கு கோரிக்கை

 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள்  தவிப்பு,முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 16 உறுப்புக்  கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 3500 மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் 10 ஆண்டுகளாக  நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள்  தவிப்பாக தவிக்கின்றனர் என்றும் இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

       சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கீழ்  இயங்கும்  மதுரை, திருநெல்வேலி, திண்டிவனம், திண்டுக்கல், ஆரணி, விழுப்புரம், பண்ருட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி ராமநாதபுரம், உள்பட 16 உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள்  என 3500.க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 

    கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர், பணியாளர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்து வருவதாகவும், இதில் 6-வது ஊதிய குழு படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஏழாவது ஊதிய குழு படி ஊதியம் வழங்காமல் இருப்பதும், 10 ஆண்டுகாலம் ஒரே பதவியில் இருந்து வரும் ஆசிரியர்கள்,  ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊழியர்களுக்கு தேர்வுநிலை  வழங்கப்படவில்லையாம்.வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்து வருவதாகவும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:- 

கடந்த 10 ஆண்டு காலமாக உறுப்பு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிக்கை உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்து வருகிறது.     

       இதுகுறித்து பலமுறை அண்ணா பல்கலைக்கழகத்தில் முறையிட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தி வரும் அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக முதல்வரும், உயர் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென உறுப்பு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அலுவல ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.