Skip to main content

Posts

Showing posts from January, 2024

எ.வ.வேலு திமுகவின் ஏ.டி.எம் வேலு, ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முதலமைச்சர் வர மாட்டார் என அண்ணாமலை குற்றச்சாட்டு

குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தன ஆட்சி, ஜாதி வைத்து ஆட்சி இவை நான்கையும் வெளியேற்ற வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலசப்பாக்கத்தில் நடைபாதை என யாத்திரையும் மேற்கொண்டார் கலசப்பாக்கம் தொகுதியில் வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களால் மிகுந்து வரவேற்பளிக்கப்பட்டது. யாத்திரை முடித்து பேசுகையில்,  குடும்ப ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஊழல் ஆட்சியை வெளியேற்ற வேண்டும், அடாவடித்தன ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஜாதி வைத்த ஆட்சி செய்வதை வெளியேற்ற வேண்டும், இவை நான்கையும் வரும் தேர்தலில் வெளியேற்ற வேண்டும் என பேசினார். தமிழக முதல்வர் திருவண்ணாமலைக்கு 31 மாதங்களில் இரண்டு முறை வந்துள்ளார், முதல் முறை வந்தது எதற்காக என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி திறந்து வைப்பதற்கு, இரண்டாவது முறை எதற்கு வந்தார் என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு வந்தார். ஏழை மக்களுக...

6ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம், 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

  அமரர் ஜெயபால் தேவகி அம்மாள் நினைவாக  திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் ஸ்ரீ ஜெயதேவகி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாம் துவக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.  த.வேணுகோபால், அரிமா சங்க முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. சி.எஸ்.துரை, அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.  காலை உணவு, மதிய உணவு, தண்ணீர் பாட்டில், தேனீர், பிஸ்கட், சுவரொட்டிகள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நினைவு பரிசு உள்ளிட்டவை அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் அவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது. இந்தக் கண் பரிசோதனை முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் 102 பெண்கள் 112 என மொத்தம் 214க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர். கண்புரை, க...

பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் ஏற்பாட்டில் ஆன்மீக பாடல்கள் பஜனை மற்றும் சொற்பொழிவு

  அயோத்தியில் ஸ்ரீ பாலராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 11 நாள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி சாஷ்டாங்கமாக வணங்கி பிராணப் பிரதிஷ்டை ஆனது சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனை உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பாலராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், ராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி உடனுறை ராதா ருக்மணி ஆலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் ஏற்பாட்டில் ஆன்மீக பாடல்கள் பஜனை மற்றும் சொற்பொழிவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இசைக்குழுவினர் ராமர் பற்றிய சுவாரஸ்யமான வரலாறு மற்றும் இடையிடையே ராமர் பாடல்களை மனமுருக பாடி பக்தர்களை பரவசமூட்டினர். பின்னர் வேணுகோபால சுவாமிக்கு தாலாட்டு பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு சுண்டல், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் தொடர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகளை திறம்பட...

ஈ.சி.ஹெச்.எஸ் மருத்துவமனையில் நடைபெறும் குளறுபடிகளை சரி செய்ய முன்னாள் ராணுவ வீரர்கள் தீர்மானம்

  திருவண்ணாமலை வேங்கிக்கால் மிலிட்டரி ஹோட்டல் எதிரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பாக இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.  திருவண்ணாமலை அனைத்து மாவட்ட அசோசியேஷன் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டு ஈ.சி.ஹெச்.எஸ் மருத்துவமனையில் நடக்கும் குளறுபடிகளை சரி செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சங்கத்தின் தலைவர்கள் மூலம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஸ்டேஷன் ஹெட் குவாட்டர் கமாண்டர் மற்றும் சென்னை ஜெனரல் ஆபிஸர் கமாண்டிங் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைவர் பி.கருணாநிதி,  துணைத்தலைவர் அந்துராஜ் மற்றும் மாவட்ட தாலுகா சங்கத் தலைவர் பலரும் உரையாற்றினார்‌. கேப்டன் உசேன், கேப்டன் ரவி, கேப்டன் பலராமன், கேப்டன் குப்புசாமி கவுண்டர், அவுல்தார் அருள்தாஸ், சுபேதார் மேஜர் சேட்டு, சுபேதார் பாபு, சகாதேவன், பெஞ்சமின், காந்தி, வேலு, தமிழரசன், கேப்டன் கிறிஸ்துராஜ், செந்தில்குமார் என மாவட்டத்தின்...

பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டையை 1000 விளக்கு ஏற்றி மகாயாக குண்டம் வைத்து தீபாவளி போல் கொண்டாடிய மாவட்ட பட்டியலணி தலைவர் விஜயராஜ்

  அயோத்தியில் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு திருவண்ணாமலை பல்லவன் நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ராமபிரானின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை வைத்து பூஜை செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திருவுருவப்படத்தையும் வைத்து மிகப்பெரிய யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. மகா யாக வேள்வி பூஜை ஆனது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் அவரது ஏற்பாட்டில் இல்லத்தின் அருகே நடைபெற்றது. சித்தர்களின் மகா யாக குண்டத்தில் கொல்லிமலை சித்தர் பிரேம் சாய் பாபா முன்னிலையில் 108 திரவியங்கள், ஹோம குச்சிகள், மூலிகைகள், பஞ்சாமிர்தம், பால், தயிர், வெண்ணெய், இளநீர், பூ, பொறி, சந்தனம் உள்ளிட்டவை மகாயாக குண்டத்தில் போட்டு சிறப்பான முறையில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த மகாயாகத்தில் சாதுக்கள், சன்னியாசிகள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யாக குண்டத்தை சுற்றி வந்து வேண்டி வணங்கி வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகா யாகம் அன்னதான பிரசாதம் வழங்கப...

பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை முன்னிட்டு அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் ராமர் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாகலம்

  உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராம் லல்லா என்ற இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஐந்து வயது பால ராமர் சிலையின் பிராணப் பிரதிஷ்டை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 11 நாள் விரதம் இருந்து பயபக்தியுடன் பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்று பூஜை செய்து தீபாராதனை காட்டி சாஷ்டாங்கமாக வணங்கி வழிபட்டார்.  அயோத்தி நகரம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் கோலாகலமாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.  திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள சந்திர லிங்கம் அருகில் உள்ள அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் அருணாச்சலம் அடியார்கள் ஏற்பாட்டில் ராமர் கொடி ஏற்றப்பட்டு ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் என்ற கோஷம் விண்ணை பிளக்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தீபாராதனை காட்டி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கிராம திருக்கோவில் திருப்பணிக்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பாஜக ஆன்மீக பிரிவு முன்னாள் தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமை தாங்கினார். பா.ஜ...

ஸ்ரீ பால்முனீஸ்வரன் சுவாமி ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மேக்களூர் கிராமம் கிராமம் பூவரசன் புரவடையில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பால் முனீஸ்வரன் சுவாமி ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மீது சுவாமி மருள் வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. கும்பாபிஷேகம் துவக்க நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் மங்கள இசையுடன், தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது. பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி,  கும்பலங்காரம், அங்குரார்பணம்,  ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது. இன்று காலை லட்சுமி பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து ஸ்ரீ பால் முனீ...

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையினை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

  ‌ திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களுக்கு ‌2022-23ம் ஆண்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் அமரவாணி வரவேற்று பேசினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஆவின் மேலாளர்கள் சுகன்யா (பால் உற்பத்தி), காளியப்பன்(பால் சேகரிப்பு குழு), அட்மா குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்கள் 734 பேருக்கு மொத்தம் ரூ 8 லட்சத்து ஒரு ஆயிரம் ஊக்கத்தொகைகளை வழங்கியும், சிறந்த முறையில் பால் ஊற்றியதற்கு பாராட்டியும், மேன்மேலும் பால் உற்பத்தியை பெருக்குவதால் அனைவருக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வழி வகுக்கும் எனக் கூறிய துணை சபாநாயகர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.    விழாவில் சங்க தனி அலுவலரும் செய...

47வது அகில இந்திய கராத்தே போட்டிகள், ஷீகான் சரவணன் தலைமையில் பயிற்சி பெற்ற சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தல்

  வேலூர் நாதன் மஹால் திருமண மண்டபத்தில் 47வது அகில இந்திய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்திய தலைவர் கியோஷி ரமேஷ் பாபு அவர்கள் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா முழுவதும் இருந்து அனைத்து மாநில கராத்தே வீரர்களும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கராத்தே பயிற்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் என 2500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் இந்த கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி மாணவர்கள் 35க்கும் மேற்பட்டோர் கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர். போட்டிகளின் முடிவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் முதல் பரிசு 18 பேர் , இரண்டாம் பரிசு 11 பேர் மற்றும் மூன்றாம் பரிசு 6 பேர் பெற்றனர். வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியின் தலைமை பயிற்சியாளரும், திருவண்ணாமலை மாவட்ட கராத்தே டோ சங்கம் மாவட்ட செயலாளர் ஷீகான் சரவணன் மற்றும் பயிற்ச...

வீரபாண்டிய கட்டபொம்மன் 265 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி மாபெரும் பேரணி

  சுதந்திரப் போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி மாபெரும் பேரணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்தார் திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திருவண்ணாமலை மாவட்ட அனைத்து நாயுடுகள் சங்கம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குணசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில தடகள சங்க தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் மாவீரர் கட்டபொம்மன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  இந்த பேரணி அண்ணா சிலை பெரியார் சிலை வழியாக சின்ன கடை தெருவில் உள்ள நாயுடு மகாலில் முடிவடைந்தது. நாயுடு மகாலில் நடந்த கூட்டத்தில் 500க...