Skip to main content

எ.வ.வேலு திமுகவின் ஏ.டி.எம் வேலு, ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முதலமைச்சர் வர மாட்டார் என அண்ணாமலை குற்றச்சாட்டு



குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தன ஆட்சி, ஜாதி வைத்து ஆட்சி இவை நான்கையும் வெளியேற்ற வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலசப்பாக்கத்தில் நடைபாதை என யாத்திரையும் மேற்கொண்டார்

கலசப்பாக்கம் தொகுதியில் வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களால் மிகுந்து வரவேற்பளிக்கப்பட்டது.

யாத்திரை முடித்து பேசுகையில், 

குடும்ப ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஊழல் ஆட்சியை வெளியேற்ற வேண்டும், அடாவடித்தன ஆட்சியை வெளியேற்ற வேண்டும், ஜாதி வைத்த ஆட்சி செய்வதை வெளியேற்ற வேண்டும், இவை நான்கையும் வரும் தேர்தலில் வெளியேற்ற வேண்டும் என பேசினார்.

தமிழக முதல்வர் திருவண்ணாமலைக்கு 31 மாதங்களில் இரண்டு முறை வந்துள்ளார், முதல் முறை வந்தது எதற்காக என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரி திறந்து வைப்பதற்கு, இரண்டாவது முறை எதற்கு வந்தார் என்றால் அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு வந்தார். ஏழை மக்களுக்கு நன்மை தரும் நல்ல திட்டங்களை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் வரமாட்டார்.

தமிழகத்தில் கல்விநிலை சரியில்லை பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது, பாஜக வெற்றி பெற்றால் முதல் வேலை பட்டி தொட்டி எல்லாம் மத்திய அரசின் உயர்தர கல்வியை தருவது.

ஜவ்வாது மலையில் ST மக்களுக்கு தனி பள்ளிக்கூடம் அமைத்து தருவது முதல் வேலை என கலசப்பாக்கத்தில் அண்ணாமலை பேசினார்.

எ.வ.வேலு பெயர் உண்மையிலேயே திமுகவின் ஏ.டி.எம் வேலு, திமுகவிற்கு ஏடிஎம் இருக்கிறது என்றால் அது எ.வ.வேலு. மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஐம்பதாயிரம் கோடி, அறுபதாயிரம் கோடி என கொள்ளை அடித்து வைத்துள்ளார். அவர் என்ன தொழில் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அண்ணாமலை பேசினார்.

பெருங்கோட்ட பொறுப்பாளர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் என் மண் என் மக்கள் யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், தொகுதி பொறுப்பாளர் எஸ் பி கே சுப்பிரமணியன், தொகுதி அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ், தொகுதி இணை அமைப்பாளர் கவிதா, முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, மாவட்ட செயலாளர் பாலாஜி, தலைவர்கள் ஐயப்பன், ரமேஷ், குமார், வெங்கடேசன், செல்வராஜ், அமுதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என் மன் என் மக்கள் யாத்திரையில் வரலாறு காணாத வகையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.