ஸ்ரீ பால்முனீஸ்வரன் சுவாமி ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மேக்களூர் கிராமம் கிராமம் பூவரசன் புரவடையில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பால் முனீஸ்வரன் சுவாமி ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மீது சுவாமி மருள் வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
கும்பாபிஷேகம் துவக்க நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பாபிஷேக திருப்பணிகள் மங்கள இசையுடன், தேவதா அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், மகா தீபாராதனையுடன் துவங்கியது.
பின்னர் நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்பலங்காரம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை, திரவியாஹூதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டாவை நடைபெற்றது.
இன்று காலை லட்சுமி பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, பிரான பிரதிஷ்டை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்களால் கலசங்கள் கோயிலை சுற்றி வந்து ஸ்ரீ பால் முனீஸ்வரர் மூலவர் மற்றும் விஸ்வரூபத்திற்கும், பரிவார தெய்வத்திற்கும் உச்சியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி வந்து ஆடினர்.
ஸ்ரீ பால் முனீஸ்வரர் சுவாமி ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, கோவில் தர்மகர்த்தா ஞானசேகர், ஸ்ரீ பால்முனிஸ்வரன் குலதெய்வ வழிபாடு செய்யும் வகையறாக்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழாவினை நடத்தினர்.





Comments
Post a Comment