Skip to main content

6ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம், 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

 


அமரர் ஜெயபால் தேவகி அம்மாள் நினைவாக  திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் ஸ்ரீ ஜெயதேவகி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முகாம் துவக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.  த.வேணுகோபால், அரிமா சங்க முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. சி.எஸ்.துரை, அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் உள்ளிட்டோர் வருகை தந்தனர். 

காலை உணவு, மதிய உணவு, தண்ணீர் பாட்டில், தேனீர், பிஸ்கட், சுவரொட்டிகள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நினைவு பரிசு உள்ளிட்டவை அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் அவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது.

இந்தக் கண் பரிசோதனை முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் 102 பெண்கள் 112 என மொத்தம் 214க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர். கண்புரை, குளுக்கோமா, தூரப்பார்வை, கிட்டப் பார்வை, கண் அழுத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருத்துவர் அறிவுரையுடன் மருந்து மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

பரிசோதனையில் கலந்து கொண்ட 214 நபர்களில் 58 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் பதிவு செய்யப்பட்டு பின்னர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அவர்களை சொந்த ஊர் அழைத்து வந்து விடப்படுகின்றனர்.

அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இந்த கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

கண் பரிசோதனை முகாம் ஏற்பாடுகள் அனைத்தையும் ஈராடி.முருகன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.