Skip to main content

Posts

Showing posts from July, 2025

சு.பொலக்குனம் கிராமத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சு.பொலக்குனம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.  முகாமில் ஆரஞ்சு கலிங்கேரி சு.பொலக்குனம் கிராம பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாற்றுதல். முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.  மேலும் முகாமில் இலவசமாக மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது இதில் முதியவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.  இம்முகாமில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் முகாமில் கொண்டனர்

திருவண்ணாமலை மாநகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது

திருவண்ணாமலை மாநகராட்சி காந்தி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் 19 ஆவது வார்டு மற்றும் 20வது வார்டு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத் தொகை. விதவை உதவித்தொகை. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாநகராட்சி ஆணையாளர். செல்வ பாலாஜி. திமுக கட்சியின் மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன். மாநகராட்சி 19வது வார்டு மாமன்ற உறுப்பினர். நாகராஜ். உள்ளிட்டோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். உடன். திமுக வட்டப் பிரதிநிதி செல்வம். இளைஞர் அணிகள். வெங்கடேசன். குகன். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 2வது முறையாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதாக பாதிக்கப்பட்ட ஜோதி பேட்டி

திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் திருவண்ணாமலை அடுத்து வள்ளிவாகை கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கு சொந்தமான 5 ஏக்ர் 10 சென்ட்  நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, ரேணுகாம்பாள், பொன்னுசாமி உள்ளிட்ட நபர்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள்.   அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது முறையாக நாங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்திருக்கிறோம் என ஜோதி என்பவர் தெரிவித்தார். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் எங்களது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என ஜோதி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே எங்களது தற்கொலைக்கு மாவட்ட நிர்வாகம் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்..

  திருவண்ணாமலை மாநகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சலாம் சர்கார் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.  முகாமில் 21 மற்றும் 22 ஆவது வார்டு பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாற்றுதல். முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் இரண்டு வார்டு பகுதி மனுக்களை திமுக கட்சி மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன். மாநகராட்சி 22 ஆவது மாமன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி. 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர். மண்டி பிரகாஷ். ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  மேலும் முகாமில் இலவசமாக மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது. இதில் முதியவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர். மேலும் முகாமில் திமுக பகுதி செயலாளர்.சரீப். வட்ட செயலாளர் சசி என்ற கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் மற்றும் விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது

  திருவண்ணாமலை நகரின் செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில் பேர்ட்ஸ் தோண்டு நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் திருவண்ணாமலை வேகம் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் மற்றும் விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ.வாசுதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தலைவர் தமிழரிமா தா.சம்பத் முன்னிலை வகித்தார். மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் அனிதா ராம், முனைவர் சு.ஜனசக்தி ஞானவேல், முதுகலை தமிழ் ஆசிரியர் கி.கயல்விழி, முதுகலை ஆசிரியர் சா.சங்கீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். ரோட்டரி சங்க தலைவர் ஜே பி சேத்தன் செயலாளர் பிடிஎஸ் வி தீபக்குமார் பொருளாளர் எஸ் அம்ரித் குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்விப் பணியாற்றும் சான்றோர்களுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.  திருக்குறள் தொண்டு மையம் தலைவர் பாவலர் ப.குப்பன், புயல்மொழி ம...

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

ஆடி மாத இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்.

  திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சின்னகோலாப்பாடி, செ.அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சின்னகோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க சந்திஅம்மாள் என்ற பெண்மணி கடந்த 48 தினங்களாக தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து கையை விட்டு வடை எடுக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு 48 ந...

500 மாணவர்கள் பயிலும் பள்ளி அருகில் துர்நாற்றத்துடன் வாயுக்கள் வெளியேறி ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவனங்களை ஏற்றி இறக்கும் அவலம், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை

  திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு புதிய பைபாஸ் சாலை அருகே 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவச் செல்வங்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சிறார்கள் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். அத்துடன் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திறன் பயிற்சி முகாம்களும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற கனரக வாகனங்கள் துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அருகாமையில் வந்து நின்று வேறு வாகனங்களில் பரிமாறி செல்கின்றனர்.  சிறு குழந்தைகள் பயிலக்கூடிய கல்விச்சாலைகளுக்கு அருகே விச வாயுக்கள் வெளியேறக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வந்து மற்ற வாகனங்களுக்கு ஏற்றி செல்கின்றனர்.  இதனால் பள்ளி வளாகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கு அருகில் துர்நாற்றம் வீசக்க...

இந்தியாவிற்கே தெரிந்தவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி புகழாரம்

  காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுத்துள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற கருத்தின்படி திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   தண்டராம்பட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.மோகன் பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் G.குமார் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  சிறுபான்மை துறை தலைவர் ஜெயன்கான் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பேச்சாளர்  காஜா மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  பொன்.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது, ராமா ராமா என்று சொன்ன காந்தியடிகள் ஒரு முஸ்லிம் வீட்டிற்கு சென்றார் அதன் மூலம் அப...

4000 திருவாசக பக்தர்கள் கலந்து கொண்ட உலக நன்மைக்கான திருவாசக தெய்வீக மாநாடு

  திருவண்ணாமலை மாதவி பன்னீர்செல்வம் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு, தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் உலக நன்மைக்காக 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தெய்வீக திருவாசக மாநாடு நடைபெற்றது.   திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு நிறுவனத் தலைவர் திருவாசகத் தென்றல் மா.சிவக்குமார், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவத்திரு சிவராமானந்தா சுவாமிகள் ஆகியோர் ஏற்பாட்டில் திருவாசகம் எழுதியவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. சிவவாதியம் முழங்க சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் திருவாசக மாநாடு நடைபெற்றது. இன்று காலை தேனிமலை குப்பச்சி விநாயகர் கோயிலில் இருந்து, தேனி மாவட்டம் திருமுடி சுமக்கும் சிவனடியார்கள் சார்பில் 51 நடராஜர் சிலைகளுடன் வெகு விமர்சியாக ஊர்வலம் நடைபெற்றது. திருவாசகத்தை முற்றும் எழுதிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆன்மீகப் பெருமக்கள் ஆசியுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.  நிகழ்வி...