ஆடி மாத இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்.
திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சின்னகோலாப்பாடி, செ.அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னகோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க சந்திஅம்மாள் என்ற பெண்மணி கடந்த 48 தினங்களாக தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து கையை விட்டு வடை எடுக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு 48 நாள் விரதம் இருந்த சந்திஅம்மாள் ஒவ்வொரு வடையாக போட்டு தனது இரு கையால் அதனை எடுத்து பக்தர்களுக்கு காண்பித்து நேர்த்திக் கடன் செலுத்தினார், கோவிலில் கூடியிருந்த மக்கள் அரோகரா அரோகரா என முடக்கமிட்டு சந்தியம்மனை வழிபட்டனர்.

Comments
Post a Comment