திருவண்ணாமலையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்..
திருவண்ணாமலை மாநகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சலாம் சர்கார் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
முகாமில் 21 மற்றும் 22 ஆவது வார்டு பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாற்றுதல். முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் இரண்டு வார்டு பகுதி மனுக்களை திமுக கட்சி மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன். மாநகராட்சி 22 ஆவது மாமன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி. 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர். மண்டி பிரகாஷ். ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் முகாமில் இலவசமாக மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது. இதில் முதியவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர். மேலும் முகாமில் திமுக பகுதி செயலாளர்.சரீப். வட்ட செயலாளர் சசி என்ற கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment