Skip to main content

500 மாணவர்கள் பயிலும் பள்ளி அருகில் துர்நாற்றத்துடன் வாயுக்கள் வெளியேறி ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவனங்களை ஏற்றி இறக்கும் அவலம், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை

 



திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு புதிய பைபாஸ் சாலை அருகே 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவச் செல்வங்கள் பயிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சிறார்கள் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். அத்துடன் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திறன் பயிற்சி முகாம்களும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற கனரக வாகனங்கள் துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அருகாமையில் வந்து நின்று வேறு வாகனங்களில் பரிமாறி செல்கின்றனர். 


சிறு குழந்தைகள் பயிலக்கூடிய கல்விச்சாலைகளுக்கு அருகே விச வாயுக்கள் வெளியேறக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய மாட்டு தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வந்து மற்ற வாகனங்களுக்கு ஏற்றி செல்கின்றனர். 


இதனால் பள்ளி வளாகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கு அருகில் துர்நாற்றம் வீசக்கூடிய வாயுக்கள் வெளியேறியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் . அதுபோல் மீண்டும் கீழ்நாச்சிப்பட்டு தனியார் பள்ளி வளாகம் மிக அருகே துர்நாற்றம் வீசக்கூடிய வாயுகள் வெளியேறக்கூடிய மாட்டு தீவனங்களை எண்ணற்ற கனரக வாகனங்கள் மூலம் ஏற்றியும் இறக்கியும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்தி பள்ளி வளாகத்தின் அருகில் இவ்வாறு செயல்படுவதற்கு கனரக வாகன உரிமையாளர்கள், மாட்டு தீவனம் ஏற்றி செல்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.