Skip to main content

இந்தியாவிற்கே தெரிந்தவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி புகழாரம்

 



காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுத்துள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்ற கருத்தின்படி திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 


தண்டராம்பட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் G.மோகன் பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் G.குமார் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  சிறுபான்மை துறை தலைவர் ஜெயன்கான் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பேச்சாளர்  காஜா மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  பொன்.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது,

ராமா ராமா என்று சொன்ன காந்தியடிகள் ஒரு முஸ்லிம் வீட்டிற்கு சென்றார் அதன் மூலம் அப்போது நடைபெற்ற மாப்ளா கலவரம் நின்றது, மதச்சார்பின்மை என்ற ஒற்றைச் சொல்லில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது

பண மதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தை சீர் அழித்து விடும் என்று ரகுராம்ராஜன் சொன்னார்கள் அதை கேட்கவில்லை, இன்றைக்கும் காந்தியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏனென்றால் காந்தி என்பவருக்கு தான் எல்லா நாடுகளிலும் சிலை இருக்கிறது.




இந்தியா என்பது எல்லோருக்குமான நாடு என்று சர்ச்சிலிடம் விளக்கமாக எடுத்து சொன்னார், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித் என்று பிரிப்பதற்கு ஜின்னாவை பயன்படுத்தி அம்பேத்கரை பயன்படுத்துகிறீர்கள் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவுடன் எழுந்து நின்று சல்யூட் அடித்தார் சர்ச்சில்.

ஏன் ஸ்டாலின் காங்கிரஸை உடன் வைத்திருக்கிறார், ராகுல் காந்தி பார்லிமெண்டில் எழுந்த உடனே மோடி அலறுகிறார் ராகுல் காந்தி பேசினால் பதில் சொல்ல முடியவில்லை, உலக வரலாற்றில் இந்திய நாட்டின் பார்லிமென்டை பார்த்து பயந்தார் என்று சொன்னால் இன்றைய பிரதமர் மோடி அவர்கள் தான். அதிமுக என்பது அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது

இந்திய தேசத்திற்கே தெரிந்தவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமார் என்று சொன்னது உண்மைதான், காங்கிரஸ்காரர் தவறு செய்ய மாட்டான் என்று நிரூபித்து விட்டு இங்கு மீண்டும் மாவட்ட தலைவராக வந்து அமர்ந்திருக்கிறார் குமார்  என்று பொன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்த பொது கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், திருவண்ணாமலை நகரத் தலைவர் வெற்றிச்செல்வன், தானிப்பாடி நிர்வாகிகள் கார்த்தி ராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியியக்க தோழர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.