500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மத்திய பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியம், காஞ்சி பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் K.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர், தஞ்சை பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களுக்கு விளக்கும் விதமாகவும், 2024-2025 ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட் விளக்கி விரிவாக பேசினார். காஞ்சியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.டி.எம்.தர்மலிங்கம் ஆளுயர ரோஜா மலர்மாலை அணிவித்து, மலர் கிரீடம் சூட்டி, பொன்னாடை போர்த்தி சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியம், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணா, மாவட்ட பார்வையாளர் தசரதன், மா...