Skip to main content

Posts

Showing posts from June, 2024

வேணுகோபால சுவாமி ஆலய கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு 4ம் ஆண்டு திருக்கல்யாண வைபவம்

  திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கடந்த 5 நாட்களாக தினமும் காலை 8 மணி அளவில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.  இன்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசம் புறப்பட்டு கோயில் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டனர்.  ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு 4ம் ஆண்டு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. அதனை அடுத்து அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா குழுவினர் மற்றும் மெய்யூர் ஊர் பொதுமக்கள் சார்பாக கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண மகோத்சவம் சிறப்பான முறையில் நடைப...

திருவண்ணாமலை மாவட்ட ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே யூனியன் சார்பில் மாபெரும் கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது

  திருவண்ணாமலை மாவட்ட ஜப்பான் ஷிட்டோ - ரியூ கராத்தே யூனியன் சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.06.24) கட்டா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு சாய் வித்யாஸ்ரமம் பள்ளியில் 12 கட்டா வரை பயிற்சி அளிக்கப்பட்டது .  இந்நிகழ்ச்சியில் சீனியர் மாஸ்டர் மாவட்ட தலைவர் .S.சரவணன் MBA, MTech, மாவட்ட செயலாளர் M.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கராத்தே பயிற்சி முகாமில் சீனியர் மாஸ்டர்கள் கராத்தே A.S.பிரபாகர், கராத்தே R.சுப்பிரமணி, கராத்தே விஜயகுமார்-தண்டராம்பட்டு , கராத்தே அசோக்குமார், கராத்தே மணிகண்டன் கீழ் நாச்சிப்பட்டு, போலீஸ் கராத்தே விஜய் , கராத்தே ஜான்சி, கராத்தே சந்தோஷ், கராத்தே அம்பேத்கர் பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் கராத்தே ம.வெங்கடேசன் நன்றி கூறினார். இறுதியாக பள்ளி தாளாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய நூதன மகா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பீமானந்தல் புதூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய நூதன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் விண்ணை விளக்கும் வகையில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.      17ம் தேதி காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.         18ம் தேதி மாலை அங்குரார்பணம், கும்பலங்காரம், எந்திரப் பிரதிஷ்டை, பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.       19ம் தேதி காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய நூதன மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு ...

மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா, கற்பூரம் ஏற்றி,தேங்காய் உடைத்து, தீபாரதனை காட்டி வழிபட்ட பக்தர்கள்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், பூதமங்கலம் மதுரா துர்கம் கிராமத்தில் மாரியம்மன் திருக்கோயில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சக்தி கரகம், அம்மன் கரகம், பூவாடை கரகம் உள்ளிட்ட 3 கரகங்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  வீதி உலாவின்போது ஊர் பொதுமக்கள் சுவாமிக்கு கற்பூரம் ஏற்றி,தேங்காய் உடைத்து, தீபாரதனை காட்டி வழிபட்டனர். மேளதாளத்துடன் 3 கரகங்கள் வீதி உலா வந்த போது சிறுவர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாட்டில் கூழ் வார்த்தல் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. கூழ்வார்த்தல் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் பக்தர்கள் எடுத்து வந்த கூழினை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழை ஊற்றி அபிஷேகம் செய்து, தீபாரதனை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கூழ் குடங்களை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் மாரியம்மன் ஆலயத்தில் கூழ் ஊற்றப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது...

கஞ்சா, கள்ளச்சாராயம், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பதை கண்டித்து 400க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம், விற்பனையை தடுக்க 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ்

  திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், கோவூர் ஊராட்சியில் கள்ளச்சாராயம், கஞ்சா, திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் பல மாதங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குடி போதையால் பாதிப்புக்குள்ளான 400 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்திரமடைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய சந்தையாக கோவூர் ஊராட்சி மாறி உள்ளதாக பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்து நாங்கள் இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் கஞ்சா திருட்டு தனமாக விற்கும் மதுபாட்டில் முழுவது தடைசெய்யப்பட்டு மதுவில்லாத கிராமமாக கோவூர் ஊராட்சி இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது உறுதி என காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர் பின்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது . பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணன் திரு.கே. அண்ணாமலை Ex IPS அவர்களின் ஆணையின்படியும், மாநில பொதுச் செயலாளர் திருமதி. P.கார்த்தியாயினி அவர்களின் ஆனைக்கினங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் R. பாலசுப்பிரமணியன் பி.எஸ்...

அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்

       திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம்,  கூத்தலவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றபடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.      முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.        பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.       அடுத்து மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்ட...

தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை நகரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடந்த பின்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை கல்வித்துறை ஈடுபடுத்த வேண்டும், பழைய நடைமுறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கும் அரசு பள்ளி போன்று அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீபக்குமார் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி நடைபெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தலட்சுமி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 50க்கும் மேற்பட்...

4 மாத காலமாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், பாலானந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத்தில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் வழங்காமலும், தெருவிளக்குகள் எரியாததாலும் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர். பாலனந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாலனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் பாரதிபுரம் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் குடிநீர் வழங்காமலும் தெருவிளக்குகளை எரிய விடாமலும் கடந்த நான்கு மாத காலமாக அலைக்கழித்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் கிராம பொதுமக்களும் காலி குடங்களுடன் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர...

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  திருவண்ணாமலை மாவட்டம், பொற்குணம் மதுரா காரப்பள்ளம் லட்சுமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆலயங்களுக்கு ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 9ம் தேதி காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது. பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பத்தாம் தேதி காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.  அருள்மிகு ஸ்ரீ செல்வ விநா...