அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கூத்தலவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றபடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.
பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அடுத்து மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களின் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கூத்தலவாடி கிராம ஆலய திருப்பணி குழு, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.







Comments
Post a Comment