திருவண்ணாமலை மாவட்டம், பொற்குணம் மதுரா காரப்பள்ளம் லட்சுமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆலயங்களுக்கு ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
9ம் தேதி காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.
பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பத்தாம் தேதி காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
காரப்பள்ளம் லட்சுமிபுரம் கிராம, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.







Comments
Post a Comment