திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பீமானந்தல் புதூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய நூதன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் விண்ணை விளக்கும் வகையில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
17ம் தேதி காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது.
18ம் தேதி மாலை அங்குரார்பணம், கும்பலங்காரம், எந்திரப் பிரதிஷ்டை, பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
19ம் தேதி காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்கு உயிர் தரப்பட்டு பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய நூதன மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ அம்மச்சார் மாரியம்மன் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பீமானந்தல் புதூர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தினர்.







Comments
Post a Comment