Skip to main content

Posts

Showing posts from September, 2024

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி பணி வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்கிட வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு எழுத்து தேர்வு பொருத்தமற்றது என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியதன் அடிப்படையில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

செல்வமகள் நிவிதாவின் முதல் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாட்டம்!

  கோவிந்தன் வேதநாயகி தம்பதியரின் செல்வமகள் நிவிதாவின் முதல் பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, வண்ண விளக்குகள் ஜொலிக்க, பலூன்கள் கட்டி சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு குதூகலமாக கொண்டாடப்பட்டது.  நெடுஞ்சாலை துறையில் ஓய்வு பெற்ற ஊழியர் ஏழுமலை, செல்வமகள் நிவிதாவின் தாத்தா பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தார்.  பிறந்தநாள் நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் நடந்து கொண்டு குழந்தையை மனதார வாழ்த்தினர்.  முதல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான சொந்தங்கள் அனைவருக்கும் இனிப்பு, கேக் மற்றும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

பட்டா நிலத்தில் குப்பைகளை கொட்டி, குளம் வெட்டி ஜாதியை சொல்லி திட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை கோரி பேச்சுவார்த்தை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் ராயண்டபுரம் மதுரா விஜயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பஞ்சமி இடத்தில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் அத்துமீறி ஊர் குப்பைகளை கொட்டுவதும், குளம் வெட்டி வருவதையும் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதையும் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் என்.ஏ.கிச்சா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறிவித்திருந்தனர். இதனிடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது விஜயப்பனூர் முருகேசன் இடத்தை மீட்க வேண்டும், பட்டா நிலத்தில் பஞ்சாயத்து சாலை போட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பட்டா இடத்தில் குளம் வெட்டுவதை தடுக்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்...

ஸ்ரீ கங்கையம்மன் ஆலய கும்பாபிஷேகம்!

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கொழுந்தம்பட்டு மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ கங்கையம்மன் ஆலய ஜீரணோதாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  அருள்மிகு சக்தி விநாயகர், பாலமுருகர், ஸ்ரீ கங்கையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்து அம்மன் அருள் பெற்றனர். அருள்மிகு சக்தி விநாயகர், பாலமுருகர், ஸ்ரீ கங்கையம்மன் ஆலய விழா குழுவினர், கொழுந்தம்பட்டு மதுரா கிருஷ்ணாபுரம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்தினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்பட்டு ஸ்ரீ கங்கையம்மன் ஆலய கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்கள் மீது புனித நீர்த்துளிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அருள்தரும் அம்மாச்சாரம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று பக்தி பரவசம் முழங்க சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் கொத்தந்தவாடி கிராமத்தில் அம்மச்சார் அம்மனாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளி தங்கள் குலதெய்வமாக முன்னோர்கள் வழிபட்டு வந்த அருள்தரும் அம்மாச்சாரம்மன் திருக்கோயில் ஜீர்னோத்தாரன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொத்தந்தவாடி, மங்கலம், எரும்பூண்டி, கருமாரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வினை ஓம் சக்தி, ஓம் சக்தி என்று பக்தி பரவசம் முழங்க தரிசித்து அம்மனை வழிபட்டு அருள்பெற்றனர். முன்னதாக நேற்று மங்கள இசை, மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், கோபுர கலசங்கள் நிறுவுதல், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது. இன்று காலை மங்கள இசையுடன் முதற்கடவுள் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்தரும் ஶ்ரீ அ...

வி.ஹெச்.பி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா, குழந்தைகள் உறியடித்து கோலாகலம்

  திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள திருக்குறிப்பு தொண்ட நாயனார் மடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வட தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வி.ஹெச்.பி ஸ்தாபன தினம், 60ம் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் திரளான குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து கோலாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி அசத்தினர்.  பின்னர் உரியடி திருவிழா நடைபெற்று கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அகில இந்திய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்ட சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி மாணவர்கள் 25 பேர் முதலிடம் பிடித்து அசத்தல்

  சென்னை ஐ.சி.எப் பழனிசாமி பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1250 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். கராத்தே போட்டிகளில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி கராத்தே மாணவர்கள் 45 பேர் ஷீகான் சரவணன்.ச MBA, MTech National Referee A Grade--KIO and National coach தலைமையில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.   அகில இந்திய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்ட சந்தானம் தற்காப்புக் கலை அகாடமி பள்ளி கராத்தே மாணவர்கள் 25 பேர் முதல் பரிசினை தட்டி சென்றனர். 15 கராத்தே மாணவர்கள் இராண்டாம் பரிசு மற்றும் 5 மாணவர்கள் மூன்றாவது பரிசினை பெற்றனர்.  கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு உதவி பயிற்சியாளர் கு.ராஜசேகர் வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களை ஊக்குவித்தார்.  கராத்தே போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத...