Skip to main content

பட்டா நிலத்தில் குப்பைகளை கொட்டி, குளம் வெட்டி ஜாதியை சொல்லி திட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை கோரி பேச்சுவார்த்தை

 


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் ராயண்டபுரம் மதுரா விஜயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பஞ்சமி இடத்தில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் அத்துமீறி ஊர் குப்பைகளை கொட்டுவதும், குளம் வெட்டி வருவதையும் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதையும் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் என்.ஏ.கிச்சா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறிவித்திருந்தனர்.

இதனிடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது விஜயப்பனூர் முருகேசன் இடத்தை மீட்க வேண்டும், பட்டா நிலத்தில் பஞ்சாயத்து சாலை போட்டதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பட்டா இடத்தில் குளம் வெட்டுவதை தடுக்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜெயபிரகாஷ் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா சிறப்பு அழைப்பாளராக பேச்சுவார்த்தையில் பங்கேற்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு நிலத்திற்கான கோப்புகள் அனைத்தையும் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். 

தலித் விடுதலை இயக்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் இரா.அண்ணாமலை, சி.ஐ.டி.யு நாய்கனூர் ரவி, தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்கள் தலித் ஜெயக்கொடி, ஸ்ரீதரன், விசிக ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், தென்னிந்திய பழங்குடியினர் சங்கம் பழங்குடி முருகன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கதிர்காமன், 

மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் முரளிதமிழன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் மு.ரங்கநாதன்,  இளைஞரணி செயலாளர் ஆர்‌.பாண்டியன் உள்ளிட்ட பலர் பேச்சு வார்த்தையின் போது உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.