Skip to main content

Posts

Showing posts from July, 2022

2022ம் ஆண்டிற்கான கருடன் விருது, சிவ ஸ்ரீ பிரம்படி சித்தர் மதுரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிவ ஸ்ரீ பிரம்படி சித்தர் மதுரா அவர்களின் சேவையைப் பாராட்டி 2022ம் ஆண்டிற்கான கருடன் விருது, அகில பாரதிய சந்த் சமதியின் தமிழக மாநில தலைவர் யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் வழங்கினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் ஆசிரமத்தில் அகில பாரதிய சந்த் சமிதி கருடன் விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில பாரதிய சந்த் சமதியின் தமிழக மாநில தலைவர் யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கலந்துகொண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ ஸ்ரீ பிரம்படி சித்தர் மதுரா அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக 2022ம் ஆண்டிற்கான கருடன் விருது மற்றும் அகில பாரதிய சந்த் சமிதியின் தமிழ்நாடு இணைச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டினார். அப்போது கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளன்று மதுரையில் சர்வதேச தலைமை கவுன்சில் சார்பில் நடைபெற்ற  2022ம் ஆண்டிற்கான கலாம் தலைமை...

பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொதுக்கழிப்பிடம் அமைத்து தரக்கோரி ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் ஜி.ஆர்.எம் திருமண மஹாலில் நடைபெற்றது. ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமை தாங்கினார்.  ஒன்றிய பொது செயலாளர் சங்கர் கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.எம்.குமார்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு புதிய ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், அபிதா, ராமசாமி, ஏனைய அணி தலைவர்கள் தேவேந்திரன், சங்கர், சக்திவேல், ஆறுமுகம், கிளைத் தலைவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மங்கலம் ஊராட்சியில் பொதுக்கழிப்பிடம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அம...

குடியரசு தலைவராக என் டி ஏ கூட்டணி வேட்பாளர் திரௌபதி வெற்றி பெற்றதை கொண்டாடிய பாஜகவினர்.

 திருவண்ணாமலை மாவட்டம்,துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் மங்கலம் பேருந்து நிலையத்தில் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு வெற்றி பெற்றதை ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்களின் வழிகாட்டுதல்படி, இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் வெற்றி பெற்றதை  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் அவர்களின் ஏற்பாட்டில், ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில்,மாவட்டச் செயலாளர் குமார்ராஜா அவர்களின் முன்னிலையில், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் மங்கலம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர், முன்னாள் ஓ பி சி அணி மாவட்ட செயலாளர் சிவாஜி, ஒன்றிய துணைத் தலைவர் ஜீவா, முன்னாள் எஸ் சி அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு செந்தில், அண்ணாமலை, பாஸ்கர், நடராஜன், ஆறு...

பட்டியல் இனத்தை இழிவுபடுத்தி வினாத்தாள் தயார் செய்த பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.

 பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு வினாத்தாளில் ஜாதிவெறி வினாத்தாள் தயாரித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மன்னிப்பு கேட்டு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க கோரி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி தலைவர் விஜயராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக பட்டியல் இனத்தை இழிவுபடுத்தும் விதமாக வினாத்தாள் தயார் செய்த பெரியார் பல்கலைக்கழகத்தையும், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களையும் கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சதீஷ்குமார், ரமே...

120 மாணவர்கள் பயின்ற பள்ளியில் ஒரே ஆண்டில் 40 மாணவர்களாக எண்ணிக்கை குறைந்தது , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் புகார்.

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தில் 120 மாணவர்கள் பயின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் மாற்றத்தால் மாணவர்கள் எண்ணிக்கை 40 தாக குறைந்தது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் நேரில் வந்து புகார். ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியரை பணியமர்த்த கோரி மனு அளித்ததால் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருவண்ணாமலை சிஇஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் வசித்து வரும் துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த துவக்க பள்ளியில் 120 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால் தற்போது இந்த ஆண்டு திடீரென அந்த எண்ணிக்கை 40 மாணவர்களாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு வரை மீனா என்ற ஆசிரியை அந்தப் பள்ளியை கவனித்து வந்ததாகவும், மாணவர்கள் சரியான முறையில் எல்கேஜி யுகேஜி போன்ற ஆங்கில வகுப்புகளும் பயின்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு சில காரணங்களுக்காக மணிமேகலை என்ற ஆசிரியை தற்போது அந்த பள்ளியை கவனித்து வ...

மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது, மத உணர்வுகள் புண்படும்படி பேசுவது திமுகதான், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கு.

திருவண்ணாமலை இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. தமிழகத்தில் மதமாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் இந்துக்கள் சிறுபான்மையினராகவும் மாறி உள்ளனர்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரிக்கிறது. குறிப்பாக பட்டியல் சமுகத்தை குறிவைத்து மதமாற்றக்கூடிய போக்கு அதிகரித்து காணப்படுகிறது.இது போன்ற மோசடி செய்து மதமாற்றுவதை தடுக்கின்ற மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும். கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசாங்கத்தின் ஆட்சியில் திருப்தி இல்லை, மக்களே ஏன் வாக்களித்தோம் என்று வேதனையில் உள்ளனர். மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், விலைவாசி கட்டுப்படுத்துதல், சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திமுக அரசாங்கம் தோல்விதான் கண்டிருக்கிறது.தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத காரணத்தினாலும், மக்களுக்கு சேவை செய்யாத காரணத்தினாலும் மக்கள் அதிருப்தியில் இர...

பாஜக மீது காழ்ப்புணர்ச்சி, ஆளும் கட்சிக்கு ஜால்ரா, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நுழைவுவாயில் முன்பு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த நகராட்சி ஊழியர்களை கண்டித்து ஏராளமான பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தங்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் ஒருதலைபட்சமாகவும் வேண்டுமென்றே எங்கும் பா...

விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தில் நடைபெற்ற துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஹேமாவதி விஜயரங்கன் திருமண மஹாலில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் S.அமரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஒன்றிய தலைவர் R.யுவராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி சிறப்புரையாற்றினர்.  மாவட்டத் துணைத் தலைவர் இறைமாணிக்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் எம்.டி.சுந்தர்ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டச் செயலாளர் குமார்ராஜா, மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஆர்.பிரகாஷ், மருத்துவ அணி தலைவர் டா...