Skip to main content

120 மாணவர்கள் பயின்ற பள்ளியில் ஒரே ஆண்டில் 40 மாணவர்களாக எண்ணிக்கை குறைந்தது , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் புகார்.

 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தில் 120 மாணவர்கள் பயின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் மாற்றத்தால் மாணவர்கள் எண்ணிக்கை 40 தாக குறைந்தது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் நேரில் வந்து புகார். ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியரை பணியமர்த்த கோரி மனு அளித்ததால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருவண்ணாமலை சிஇஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் வசித்து வரும் துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது.

இந்த துவக்க பள்ளியில் 120 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால் தற்போது இந்த ஆண்டு திடீரென அந்த எண்ணிக்கை 40 மாணவர்களாக குறைந்துள்ளது.


கடந்த ஆண்டு வரை மீனா என்ற ஆசிரியை அந்தப் பள்ளியை கவனித்து வந்ததாகவும், மாணவர்கள் சரியான முறையில் எல்கேஜி யுகேஜி போன்ற ஆங்கில வகுப்புகளும் பயின்று வந்ததாகவும் கூறப்படுகிறது.


ஒரு சில காரணங்களுக்காக மணிமேகலை என்ற ஆசிரியை தற்போது அந்த பள்ளியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தற்போது சரியாக படிக்க முடியாததால் எல்கேஜி, யுகேஜி ஆங்கில வகுப்புகள் நிறுத்தப்பட்டதாலும் 120 மாணவர்கள் பயின்று வந்த பள்ளியில் தற்போது ஒரே ஆண்டில் 40 மாணவர்களாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த 40 மாணவர்களின் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகம் வந்து ஏற்கனவே மீனா ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்த அவர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்துவிட்டு சென்றனர்.


தங்கள் கோரிக்கை ஏற்று ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியரை நியமிக்காவிட்டால் தற்போது பயின்று வரும் 40 மாணவர்களும் அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வந்து கோரிக்கை மனு அளித்த போது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஇஓ அலுவலகத்தில் உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் சென்றனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...