Skip to main content

மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது, மத உணர்வுகள் புண்படும்படி பேசுவது திமுகதான், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கு.

திருவண்ணாமலை இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் மதமாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் இந்துக்கள் சிறுபான்மையினராகவும் மாறி உள்ளனர்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரிக்கிறது.

குறிப்பாக பட்டியல் சமுகத்தை குறிவைத்து மதமாற்றக்கூடிய போக்கு அதிகரித்து காணப்படுகிறது.இது போன்ற மோசடி செய்து மதமாற்றுவதை தடுக்கின்ற மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.

கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசாங்கத்தின் ஆட்சியில் திருப்தி இல்லை, மக்களே ஏன் வாக்களித்தோம் என்று வேதனையில் உள்ளனர்.

மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், விலைவாசி கட்டுப்படுத்துதல், சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திமுக அரசாங்கம் தோல்விதான் கண்டிருக்கிறது.தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத காரணத்தினாலும், மக்களுக்கு சேவை செய்யாத காரணத்தினாலும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

 இப்போது தேர்தல் வைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துபவர்கள் திமுகவினர் தான். அடிப்படைவாதிகளுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் அவர்கள் தான். கிறிஸ்தவ அமைப்பினருடன் பங்கெடுத்து மதமாற்றம் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது, மத உணர்வுகளை புண்படும்படி பேசுவது திமுக தான்.

பாஜகவினர் எப்போதும் மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது கிடையாது. காளி தேவியை தவறாக போஸ்டர் போட்டு சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முகமது நபி குறித்து பேசுயதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை. எனவே மதத்தை வைத்து அரசியல் செய்வது திமுகவினர் தான்.

அண்ணாமலையார் கோயிலுக்கு உடனடியாக யானை வாங்க வேண்டும். திருவண்ணாமலையில் உள்ள நெடுஞ்சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திர இந்தியா 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தமிழக அரசு முன் நின்று நடத்த வேண்டும்.தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நேரில் சென்று சந்தித்து தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும்.

 இவ்வாறு இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். அப்போது பாஜக மாவட்ட எஸ்.சி அணி தலைவர் விஜயராஜ், மகளிர் அணி தலைவர் சந்திரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...