Skip to main content

விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தில் நடைபெற்ற துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஹேமாவதி விஜயரங்கன் திருமண மஹாலில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த அறிமுக கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் S.அமரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஒன்றிய தலைவர் R.யுவராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி சிறப்புரையாற்றினர்.

 மாவட்டத் துணைத் தலைவர் இறைமாணிக்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் எம்.டி.சுந்தர்ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாஜக மாவட்டச் செயலாளர் குமார்ராஜா, மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஆர்.பிரகாஷ், மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி, ஒன்றிய பொதுச் செயலாளர் சக்திவேல், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் அருணகிரி, நகர்ப்புற ஊரக வளர்ச்சி பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மகளிர் அணி தலைவர் சந்திரா, மாவட்ட செயலாளர் குமாரி மணிவண்ணன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து வருகிறார்.ஒன்றிய செயலாளர் வள்ளி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன் மற்றும் கிளைத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் இந்த அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த அறிமுக கூட்டத்தில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகலாம்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், விநாயகமூர்த்தி, பரணி, குமரன், வேல்முருகன் கோவிந்தராஜ் உள்ளிட்ட 25 நபர்கள் ஒன்றிய பொதுச் செயலாளர் அமரேஷ் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

 மேலும் நாயுடுமங்கலம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஜெயபால் அவர்களின் ஏற்பாட்டில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஆக மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இறுதியாக நாயுடுமங்கலம் ஊராட்சி கிளை தலைவர் செல்வன் நன்றி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...