Skip to main content

பாஜக மீது காழ்ப்புணர்ச்சி, ஆளும் கட்சிக்கு ஜால்ரா, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நுழைவுவாயில் முன்பு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த நகராட்சி ஊழியர்களை கண்டித்து ஏராளமான பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தங்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் ஒருதலைபட்சமாகவும் வேண்டுமென்றே எங்கும் பாஜகவுக்கு ஆதரவான போஸ்டர்கள் திருவண்ணாமலையில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில்  போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதனை கண்டிக்கும் விதமாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நகரத் தலைவர் திருமாறன் ஏற்பாட்டில், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில், பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ரோஷன்லால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சந்தோஷ் பரமசிவம், எஸ் டி அணி மாவட்டத் தலைவர் சஞ்சீவி பழனி, இளைஞரணி செயலாளர் மணிமாறன், நகர பொதுச்செயலாளர் செந்தில்வேல், நகர ஓபிசி அணி பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், நகர பொருளாளர் சரவணன், அருணகிரிநாதன், மகளிர் அணி பொருளாளர் மாலதி, மகளிர் அணி தலைவி மலர்கொடி, மகளிர் அணி பொதுச் செயலாளர் ராஜதமயந்தி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் திருவண்ணாமலை நகராட்சி முன்பு பாஜக வுக்கு எதிராக செயல்பட்ட நகராட்சி ஊழியர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் நகராட்சி கமிஷனரை சந்தித்து இது குறித்து மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக ஆணையாளர் உறுதி அளித்ததன் பேரில் பாஜகவினர் கலைந்து சென்றனர்.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.