Skip to main content

குடியரசு தலைவராக என் டி ஏ கூட்டணி வேட்பாளர் திரௌபதி வெற்றி பெற்றதை கொண்டாடிய பாஜகவினர்.

 திருவண்ணாமலை மாவட்டம்,துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் மங்கலம் பேருந்து நிலையத்தில் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு வெற்றி பெற்றதை ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.



திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்களின் வழிகாட்டுதல்படி, இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் வெற்றி பெற்றதை  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் அவர்களின் ஏற்பாட்டில், ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில்,மாவட்டச் செயலாளர் குமார்ராஜா அவர்களின் முன்னிலையில், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் மங்கலம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


 மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர், முன்னாள் ஓ பி சி அணி மாவட்ட செயலாளர் சிவாஜி, ஒன்றிய துணைத் தலைவர் ஜீவா, முன்னாள் எஸ் சி அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு செந்தில், அண்ணாமலை, பாஸ்கர், நடராஜன், ஆறுமுகம், முருகன், முனியப்பன், அமலதாஸ், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திரவுபதி முர்மு அவர்கள் 60% சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக என் டி ஏ கூட்டணியின் சார்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளையும் திரௌபதி முர்மு அவர்கள் பெற்றுள்ளார் என்பது பாஜக கூட்டணி ஒரு மிகச்சிறந்த சரியான ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தி இருந்தது என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.


பாரதிய ஜனதா கட்சி ஒரு பழங்குடியின பெண்ணை நாட்டின் உயரிய பொறுப்பான ஜனாதிபதி பதவியில் அமர வைத்து அழகு பார்த்துள்ளது அனைவரின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது மிகை ஆகாது.


சமூக நீதி மற்றும் ஜனநாயகம் என்று எதிர்க்கட்சியினர் பெயரளவில் மட்டுமே பேசி வரும் நிலையில் பாஜக அதைத் தொடர்ந்து 100% உண்மையாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதால் பாஜகவிற்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...