திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே திருவண்ணாமலை மாவட்ட புரட்சித் தமிழர் கட்சி மற்றும் தமிழர் குடிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 224 வது குருபூஜை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அறிவொளி பூங்கா அருகே பிரம்மாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக புரட்சித் தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜே.பி.ராஜன் தலைமையில் நெய் தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சிவா தமிழன், மாவட்ட தலைவர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் தலையாம்பள்ளம் ப.கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருவண்ணாமலை அறிவொளிபூங்கா அருகில் புரட்சித் தமிழர் கட்சியின் தமிழர் குடிகள் சமூக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி விழா நடைபெற்றது புரட்சித் தமிழர் கட்சி ...