Skip to main content

உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

 



திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் தலைவர் வி.ஜெகதீசன் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இசிஜி பரிசோதனை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 300க்கும்ப் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளை வாங்கிச் சென்றனர்.


உன் நோயாளி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளை புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்தில் அழைத்துச் செல்லப்படும், மேல் சிகிச்சைக்கு மருத்துவமனையின் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவர் மற்றும் செவிலியர் கட்டணம் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.


பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் கீழ்பென்னாத்தூரில் 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்த இலவச மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.லட்சுமி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.



 உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் வி.ஜெகதீசன், செயலாளர் பி. சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் என்.குணசேகரன், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன், உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்க மக்கள் தொடர்பாளர் சிவா தமிழன், பிம்ஸ் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...