Skip to main content

Posts

Showing posts from October, 2024

கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காயம் அடைந்தவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆராஞ்சி ஊராட்சியைச் சேர்ந்த குமரக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சம்பத். அவரது சொந்த நிலத்தில் டிராக்டர் மூலம் மணல் எடுப்பதற்கு சென்றபோது அவரது பங்காளியான சங்கர் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பத்தை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.  சங்கர் என்பவர் சம்பத்தின் நெஞ்சில் மிதித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த சம்பத் கடந்த 3 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சம்பத்தின் மனைவி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நாங்கள் ஏழைகளாக இருப்பதால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அவரது மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். இனியாவது தங்களுக்கு உரிய பாதுகாப்பினை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என சம்பத்தின் மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏ...

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000 உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவண்ணாமலை மாவட்ட மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் A.ரீனா தலைமையில் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்களைத்தேடி மருத்துவ சங்க ஊழியர்கள் பங்கேற்று மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பாரி, மாவட்ட தலைவர் காங்கேயன், மாவட்ட பொருளாளர் முரளி, செங்கம் தோழர்கள் தமிழ் பூங்கா, இளங்குண்ணி சரிதா, பாண்டீஸ்வரி, தண்டராம்பட்டு தேவி, சந்தியா, நிரோஷா, சுகன்யா, அந்தோணியம்மாள், காட்டாம்பூண்டி சத்யா, நதியா, போளூர் காயத்ரி, வாசுகி, துரிஞ்சாபுரம் ரம்யா, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரை நிகழ்த்தினர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும், இ எஸ் ஐ, பி எப் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும், தீபாவளி பண்டிகை செலவு ஒரு மாத சம்பளம் முன்பணம் வழங்க வேண்டும். மகளிர்...

3500 மாணவர்கள் பங்கேற்ற மேலேரி ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி, சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் அசத்தல்

  கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தில் நியூ பவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்கள் கலந்து கொண்ட மேலேரி ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 3500க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்கள் திருவண்ணாமலை (JSKDI) மாவட்ட தலைவர் ஆசான் ச.சரவணன் MBA , MTech தலைமையில் கலந்து கொண்டனர். உடன் கராத்தே கு.ராஜசேகர், உதவி பயிற்சியாளர் உள்ளிட்டவர்கள் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி உலக சாதனை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  சந்தானம் சிலம்ப மாணவர்கள் சுமார் 40 நிமிடங்கள் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கண்டு மகிழ்ச்சி அ...

ஏ.பி.ஜி.பி ஸ்வர்ண ஜெயந்தி நிறைவு விழா, மங்கள இசை, விவாதம், சிறப்புறையுடன் விழிப்புணர்வு கொண்டாட்டம்

திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜி.பி அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பின் ஸ்வர்ண ஜெயந்தி  பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஏ பி ஜி பி இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சி காஞ்சி காமகோடி ஆஸ்தான விதுவான் டெல்லி பாபு குழுவினரின் நாதஸ்வர மங்கள இசையுடன் துவங்கியது. இதில் நுகர்வோர் விழிப்புணர்வு அடையும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுகர்வோர் விழிப்புணர்வு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. வேட்டவலம் சைவ சித்தாந்த விற்பன்னர் தங்க விஸ்வநாதன், திருக்குறள் தொண்டு மைய தலைவர் தமிழ் செம்மல் குப்பன், முதுநிலை ஆசிரியர் தேவிகாராணி, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அகில பாரத இணைச் செயலாளருமான எம் விவேகானந்தன் நெறியாளராக செயல்பட்டார் ‌ பின்னர் மாநிலத் தலைவர் வெங்கட்ராமன் ...

ஜெயின்ஸ் ஹுண்டாய் கார் விற்பனை ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா

  திருவண்ணாமலை சோ. கீழ் நாச்சி பட்டு திண்டிவனம் சாலையில் புதிதாக ஜெயின்ஸ் ஹுண்டாய் கார் விற்பனை ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஹுண்டாய் கம்பெனியின் ஜோனல் பிசினஸ் ஹெட் அணிஷ் ஷகர்வால், சவுத் சோன் ஜோனல் பிசினஸ் ஒருங்கிணைப்பாளர் யங் ஹூன் யூன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஹூண்டாய் கார் விற்பனை நிலையத்தை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். சுசில் மேத்தா M.D, ஸ்ரேய் மேத்தா E.D, தமிழ்நாடு ரீஜனல் சேல்ஸ் தலைவர் கௌரி ஸ்ரீகாந்த், சர்வீஸ் தலைவர் ஜான்பால் உள்ளிட்ட ஏராளமான கார் ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர். புதிதாக கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கார் சாவி வழங்கி கார் டெலிவரி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

150 க்கும் மேற்பட்ட திருமண அமைப்பாளர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ், இனிப்பு, பொறி கடலை, பழம் வழங்கி அசத்திய அனைத்து திருமண அமைப்பாளர்கள் சங்கம்

  திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் ஆண்டு விழா சிறப்பு மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை கூட்டம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.  மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு முப்பெரும் விழாவாக ஆண்டு விழாவானது கொண்டாடப்பட்டது.  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு பூர்ணாஹுதியுடன் பூஜை செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருமண அமைப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு ஜாதக பரிவர்த்தனை செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ், மதிய உணவு, இனிப்பு, பொறி கடலை, பழம் உள்ளிட்டவை விழா ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக ஜாதகப் பரிவர்த்தனையும் செய்யப்பட்டது. மாநிலத் தலைவர் P.ஈஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் M.சாந்தி, மாநில பொருளாளர் அம்சவேணி, மாநில மகளிர் அணி தலைவி மாலா, மாநில செயல் தலைவர் தணிகாசலம்,  மாவட்டத் தலைவர் ...

பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு காரணம் தந்தை பெரியார் தான் என தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் பேச்சு

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருத்துரையாளர்களாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தலித் நதியா,  திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ராம்குமார், சமூக ஆர்வலர்கள் பிரகாஷ் , ராஜா, ஆசிரியர் மகாலட்சுமி, மக்கள் சனநாயக குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் முரளி தமிழன், மாணவர் புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், சி ஐ டி யு ரவி,  வழக்கறிஞர் மோகன் சமூக நலப் பேரவை நிறுவனர் யுவராஜ் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பெண்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும், ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன,  பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு காரணம் தந்தை பெரியார் தான் என தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தலித் நதியா ப...