திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜி.பி அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பின் ஸ்வர்ண ஜெயந்தி பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஏ பி ஜி பி இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சி காஞ்சி காமகோடி ஆஸ்தான விதுவான் டெல்லி பாபு குழுவினரின் நாதஸ்வர மங்கள இசையுடன் துவங்கியது.
இதில் நுகர்வோர் விழிப்புணர்வு அடையும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுகர்வோர் விழிப்புணர்வு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. வேட்டவலம் சைவ சித்தாந்த விற்பன்னர் தங்க விஸ்வநாதன், திருக்குறள் தொண்டு மைய தலைவர் தமிழ் செம்மல் குப்பன், முதுநிலை ஆசிரியர் தேவிகாராணி, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அகில பாரத இணைச் செயலாளருமான எம் விவேகானந்தன் நெறியாளராக செயல்பட்டார்
பின்னர் மாநிலத் தலைவர் வெங்கட்ராமன் சுவர்ண ஜெயந்தி ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா கிருஷ்ணா ராம் கம்பராமாயண இயக்கத்தின் சாயி கங்கா ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக திருவண்ணாமலை ஏபிஜிபி ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனிவாசன் நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில BMS உடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க வேண்டி தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட BMS ல் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

Comments
Post a Comment