இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் 295 வது உழவாரப்பணி 24 அக்டோபர் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை பகுதி பக்தர்கள் இடையே திருக்கோவில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதி உலா அடியார்கள் இணைந்து பன்னிரு திருமுறை ஈசனை சுமந்து கைலாய வாத்தியங்களுடன் திருக்கோவில்களின் தூய்மை குறித்த பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு செய்தனர். விழிப்புணர்வின்போது பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து 25 அக்டோபர் சனிக்கிழமை சிவஅண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட சைவ பெருவிழாவில் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு. ச. கணேசன் ஐயா அவர்களின் சிவநெறிச் சேவையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள...
திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளியில், திருவண்ணாமலை மாவட்ட வனவாசி சேவா கேந்திரம் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி மற்றும் புத்தாடை வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், ஆர்.எஸ்.எஸ் திருவண்ணாமலை மாநகர தலைவர் எஸ்.வி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜதமயந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அவரது ஏற்பாட்டில் வேட்டி, சேலை, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். வனவாசி சேவா கேந்திர மாநில அமைப்பு செயலாளர் துளசி கணேசன், மாநிலப் பெண்கள் பொறுப்பாளர் அ.சிவகங்கை, திருவண்ணாமலை ஆர்.எஸ்.எஸ் கே.அரவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் தமிழரசி, ஊடக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனவாசி சேவா கேந்திர நிர்வாகிகள் ந...