Skip to main content

Posts

சிவத்திரு. ச. கணேசன் ஐயா அவர்களின் சிவநெறிச் சேவையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களால் ” திருக்கோவில் உழவார செம்மல்" என்ற விருது வழங்கப்பட்டது.

  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் 295 வது உழவாரப்பணி 24 அக்டோபர் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை பகுதி பக்தர்கள் இடையே திருக்கோவில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதி உலா அடியார்கள் இணைந்து பன்னிரு திருமுறை ஈசனை சுமந்து கைலாய வாத்தியங்களுடன் திருக்கோவில்களின் தூய்மை குறித்த பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு செய்தனர்.  விழிப்புணர்வின்போது பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.  தொடர்ந்து 25 அக்டோபர் சனிக்கிழமை சிவஅண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட சைவ பெருவிழாவில் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு. ச. கணேசன் ஐயா அவர்களின் சிவநெறிச் சேவையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள...
Recent posts

100க்கும் மேற்பட்ட வனவாசி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடை இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

  திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளியில், திருவண்ணாமலை மாவட்ட வனவாசி சேவா கேந்திரம் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி மற்றும் புத்தாடை வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், ஆர்.எஸ்.எஸ் திருவண்ணாமலை மாநகர தலைவர் எஸ்.வி.முத்துக்குமரன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜதமயந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அவரது ஏற்பாட்டில் வேட்டி, சேலை, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். வனவாசி சேவா கேந்திர மாநில அமைப்பு செயலாளர் துளசி கணேசன், மாநிலப் பெண்கள் பொறுப்பாளர் அ.சிவகங்கை, திருவண்ணாமலை ஆர்.எஸ்.எஸ் கே.அரவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் தமிழரசி, ஊடக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனவாசி சேவா கேந்திர நிர்வாகிகள் ந...

தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி, கராத்தே செய்து சாதனை புரிந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள்

   முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லை கலைக்கூடம் சார்பில் சங்கராபுரம் நியூ பவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கேல் ரத்னா சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றியும் , கராத்தே செய்தும் மாணவர்கள் சாதனை புரிந்தனர்.  45 நிமிடம் சிலம்பம் சுற்றி, கராத்தே செய்து சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் பனியன் உள்ளிட்டவை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் மூத்த ஆசான்கள் பலர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி ஆசான் சரவணன் MBA, MTech அவர்களுக்கு கேல் ரத்னா உலக சாதனை நிகழ்ச்சி நடத்துநர் கராத்தே மணி அவர்கள் ஆசான் சரவணனுக்கு டைமெடல், சான்றிதழ், டை விசில், கோப்பை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.  இதில் 25க்கும் மேற்பட்ட மாவட்ட கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமை...

உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் தலைவர் வி.ஜெகதீசன் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இசிஜி பரிசோதனை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 300க்கும்ப் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளை வாங்கிச் சென்றனர். உன் நோயாளி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளை புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்தில் அழைத்துச் செல்லப்படும், மேல் சிகிச்சைக்கு மருத்துவமனையின் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவர் மற்றும் செவிலியர் கட்டணம் அனைத்தும் இலவசம் என்பது க...

இந்திய அரசு காந்தி சில்ப் பஜார் கண்காட்சியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

  இந்திய அரசு காந்தி சில்ப் பஜார் கண்காட்சியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் காந்தி சில்ப் பஜார் அகில இந்திய கைவினைப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பணையை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி திறந்து  வைத்து பார்வையிட்டார். இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கை வினை பொருட்கள் துறை நிதியுதவியுடன்  காந்தி சில்ப் பஜார் அகில இந்திய கைவினைப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பனை பெட் கிராட் ஏற்பாட்டில் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டது. பெட் கிராட் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் விற்பனை மற்றும் கண்காட்சியினை தமிழ் நாடு சட்டப்பேரவை துணைத் தலைவைர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். இந்த விற்பணை மற்றும் கண்காட்சி வரும் 9 ந் தேதி வரை 7 நாட்கள் காலை 10முதல் இரவு 8.30.வரை நடைபெறும். அனைத்து தினங்களிலும்  இந்தியா முழுவதும்  உள்ள தலைசிறந்த அனைத்து மாநில கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்களும் நேரடி விற்பணை நடைபெறுகிறது. கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல்முறை விளக்கமும்...

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி ( Impossible Book of World Record ) நடைபெற்றது.

  சங்கராபுரத்தில் நடைபெற்ற சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.   தொடர்ந்து சுமார் 1:30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் ஸ்கிப்பிங் கயிறு, மரக்கன்று வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மூத்த ஆசான்கள் பலர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி ஆசான் சரவணன் MBA, MTech அவர்களுக்கு Impossible Book of world record நிகழ்ச்சி நடத்துநர் தாமோதரன் மற்றும் ஆசான் சூரியமூர்த்தி ஆகியோர் ஆசான் சரவணனுக்கு மிகப்பெரிய கோப்பை மற்றும் வீரவாள் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.  இதில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்களுக்கு ஆசான் சரவணன்.ச அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.