Skip to main content

Posts

வருகிற 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி ஸ்ரீ கணபதி ஹோமம், 108 தம்பதிகள் பூஜை நடைபெற்றது

  திருவண்ணாமலை, போளூர் சாலை, செட்டிகுளமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு நம் அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. 108 தம்பதிகள் முன்னிலையில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், பக்தி பாடல்கள் பாடி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.  அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு 108 தம்பதி பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அம்மனின் அருள் பெற்றனர். ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து தம்பதியினருக்கும் அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி இத்து திருக்கோயிலில் ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
Recent posts

கால்வாய் பணிகள் முடிக்காததால் கழிவுநீர் வெளியேறி நோய் தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவல நிலை, விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சோகம், கழிவுநீர் கால்வாய் முழுமையாக போடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் ஆவேசம்

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நான்கு வழி சாலை போடப்பட்டு வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி வருவோர் இருக்கும் இடங்களில் கழிவு நீர் ஆறு போல் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் வரும் வாகனங்கள் வழுக்கு விழுந்து ஏற்கனவே 3 பேர் பலியாகி உள்ளனர்.  கழிவுநீர் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்பட்டு, குழந்தைகள், முதியோர் என அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  கழிவுநீர் கால்வாய் பணிகளை முடிக்காமல் சாலை போடும் காண்ட்ராக்டர் சாலையை முடித்துவிட்டு செல்லலாம் என்று ஏற்பாடு செய்து வருகின்றனர். அவ்வாறு கழிவுநீர் கால்வாய் முழுமையாக கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் சாலை பணிகளை முடித்தால் கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிக...

149 ஆவது மாதமாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை ஒட்டி கிரிவலம் வந்த 45 லட்சம் பக்தர்களுக்கு 3 ஆயிரம் லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு இட்லி சாம்பார் உடன் தீபத் திருவிழா மகா தீபத்தை ஒட்டி ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் அன்னதானம் வழங்கப்பட்டது

  தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி வழங்கி பசி ஆற்றும் அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக பௌர்ணமி தோறும் 6000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம், சாம்பாருடன்  இட்லி வழங்கி பக்தர்களின் பசியாற்றும் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கியது. 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி என சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றியதால் பக்தர்கள் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர் திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 6000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின்...

அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் தாமு பரிசு வழங்கி பாராட்டு

  திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் உள்ள ராஜா ராணி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் செயல்பட்டு வரும் ஐ மேத் அபாகஸ் நிறுவனம் சார்பில் சென்ற மாதம் நடத்தப்பட்ட 8வது மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   அபாகஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக பரிசுகள் வழங்கும் விழாவில் நடிகர் தாமு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.  டிசம்பர் 5ஆம் தேதி கவிஞரும் நடிகருமான சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா சினேகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். டிசம்பர் 7ஆம் தேதி நடிகர் தாமு அவர்கள் இரண்டாவது கட்டமாக அபாகஸ் போட்டியில் பங்கேற்று சிறப்புரையாற்றி அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ், மரக்கன்றுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முன்னதா...

பக்தி பரவசத்துடன் திருவாசக பாடல் வரிகளை பாடி பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்திய ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி ஊக்குவித்த ஜீவகாருண்யம் பவுண்டேஷன்

  திருவண்ணாமலை நொச்சிமலை புதிய புறவழிச் சாலையில் உள்ள பொன்னுசாமி மினி மஹாலில் ஜீவகாருண்யம் பவுண்டேஷன் சார்பில் திருவாசகம் பாராயணம் போட்டி 2025 ஜீவகாருண்யம் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் சிவபுத்திரி செல்வி அவர்கள் தலைமையில், துணைத்தலைவர் சிவமோகன்ராஜ், துணைச்செயலாளர் சிவஜோதிகணேஷ் ஆகியோர் முன்னிலையில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று திருவாசக பாடல் வரிகளை பக்தி பரவசத்துடன் பாடி பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர்.  திருவாசகம் பாராயணம் போட்டிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிவபுராணம் 95 வரிகளும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிவபுராணமும் பஞ்ச புராணம் பாடல் வரிகளை மாணவர்கள் பக்தி மனம் கமய பாடினர்  9ம் வகுப்பு 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிவபுராணம், பஞ்சபுராணம், ஐந்துகரத்தனை, ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று மற்றும் வான்முகில் வழாது பெய்க உள்ளிட்ட பாடல் வரிகளை பாடினர், 11 மற்றும் 12-ஆ...

4000 கராத்தே மாணவர்கள் பங்கேற்ற தேசிய கராத்தே போட்டிகளில் சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 7 பேர் முதலிடம் பிடித்து சாதனை

  வேலூர் மாவட்டம் ஶ்ரீ புரம் ஶ்ரீ நாராயணி பள்ளி மற்றும் ஜப்பான் சிட்டோ-ராய் கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து நடத்திய தேசிய கராத்தே போட்டிகளில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்று சிறந்த முறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.  ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மா அவர்கள் ஆசியுடன் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4000 கராத்தே மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கராத்தே R.சுப்பிரமணி கலந்து கொண்டார். தேசிய கராத்தே போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டம் சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 21 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதில் 7 பேர் முதல் பரிசு, 8 பேர் இரண்டாம் பரிசு மற்றும் 6 பேர் மூன்றாவது பரிசு பெற்றனர். பரிசு பெற்றவர்களுக்கு கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சந்தானம் தற்காப்பு கலை நிறுவனர் கியோஷி ச.சரவணன் அவர்களுக்கு 8 வது கருப்பு பட்டை நாராயணி...

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அம்மன் உள்ளிட்ட 3 திருக்கோயில்கள் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, 1000கீகும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் பூதமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அம்மன் உள்ளிட்ட 3 திருக்கோயில்கள் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஊராட்சி மன்ற உறுப்பினர் ப.கோபி, சாரு ஏழுமலை, சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, படவிட்டான், ஆனந்தன், சுமன், முருகன்,  தேவன்,  கணேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.    முன்னதாக மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை,  கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி ஹோமம், முதல் யாகசாலை பூஜை,  மஹா பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை,108 கலச அபிஷேகம்  உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  கலச புறப்பாடு  நடைபெற்று அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அ...