Skip to main content

149 ஆவது மாதமாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை ஒட்டி கிரிவலம் வந்த 45 லட்சம் பக்தர்களுக்கு 3 ஆயிரம் லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு இட்லி சாம்பார் உடன் தீபத் திருவிழா மகா தீபத்தை ஒட்டி ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் அன்னதானம் வழங்கப்பட்டது

 


தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி வழங்கி பசி ஆற்றும் அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை


கடந்த 13 ஆண்டுகளாக பௌர்ணமி தோறும் 6000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம், சாம்பாருடன்  இட்லி வழங்கி பக்தர்களின் பசியாற்றும் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கியது. 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி என சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றியதால் பக்தர்கள் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்


திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 6000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது.


இந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளருமான திரு.தியாகராஜன் அவர்கள் ஓய்வு பெற்ற பின் ஆரம்பித்தது இந்த கிரிவல பக்தர்களின் பசியாற்றும் அறக்கட்டளை.


பக்தர்களின் ஒத்துழைப்பாலும், சிவனடியார்களின் ஆதரவினாலும் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மாலை 06:00 மணிக்கு தொடங்கி  3000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லியும் சுகாதாரமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் வழங்கப்படுகிறது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த உடன் இலைகள் அனைத்தும் குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் சுகாதாரமான முறையில் குப்பைகளுக்கு அனுப்பப்படுகிறது.


பௌர்ணமி பக்தர்களுக்கு அன்னதானம் நடப்பதை தவிர ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லத்திற்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


உலக பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழா கிரிவலம் வந்த 45 லட்சம் பக்தர்களுக்கு ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை சிறப்பு அன்னதானம் வழங்கியது. 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி என தீபத் திருவிழா மட்டுமின்றி மறுநாள் பௌர்ணமி கிரிவலம் வந்த பக்தர்கள் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றியதால் பக்தர்கள் நன்றி கலந்த பாராட்டுகளை ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டனர்

அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 2026 புத்தாண்டு தமிழ் காலண்டர் அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை நிறுவனர் தியாகராஜன் அனைவருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எல்லோருக்கும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே நம் அறக்கட்டளையின் நோக்கம். நீங்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறக்கட்டளையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

நீங்களும் அறக்கட்டளை மூலம் அன்னதானம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443535737, 9445265737

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.