Skip to main content

கால்வாய் பணிகள் முடிக்காததால் கழிவுநீர் வெளியேறி நோய் தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவல நிலை, விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சோகம், கழிவுநீர் கால்வாய் முழுமையாக போடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் ஆவேசம்

 


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நான்கு வழி சாலை போடப்பட்டு வருகிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி வருவோர் இருக்கும் இடங்களில் கழிவு நீர் ஆறு போல் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் வரும் வாகனங்கள் வழுக்கு விழுந்து ஏற்கனவே 3 பேர் பலியாகி உள்ளனர்.


 கழிவுநீர் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்பட்டு, குழந்தைகள், முதியோர் என அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


 கழிவுநீர் கால்வாய் பணிகளை முடிக்காமல் சாலை போடும் காண்ட்ராக்டர் சாலையை முடித்துவிட்டு செல்லலாம் என்று ஏற்பாடு செய்து வருகின்றனர். அவ்வாறு கழிவுநீர் கால்வாய் முழுமையாக கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் சாலை பணிகளை முடித்தால் கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வாழவச்சலூர் கிராம பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 மேலும் நெடுஞ்சாலைத்துறை இதை உடனடியாக கழிவுநீர் கால்வாய் பணிகளை முழுமைப்படுத்தி முடித்த பின்னர் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததற்கு திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியிடம் தெரிவித்தால், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மனு அளித்த போது திருவண்ணாமலை மாவட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றி மாற்றி அப்பகுதி மக்களை அலைக்கழிப்பதாகவும் கிராம மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.