Skip to main content

Posts

Showing posts from September, 2025

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி ( Impossible Book of World Record ) நடைபெற்றது.

  சங்கராபுரத்தில் நடைபெற்ற சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.   தொடர்ந்து சுமார் 1:30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் ஸ்கிப்பிங் கயிறு, மரக்கன்று வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மூத்த ஆசான்கள் பலர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி ஆசான் சரவணன் MBA, MTech அவர்களுக்கு Impossible Book of world record நிகழ்ச்சி நடத்துநர் தாமோதரன் மற்றும் ஆசான் சூரியமூர்த்தி ஆகியோர் ஆசான் சரவணனுக்கு மிகப்பெரிய கோப்பை மற்றும் வீரவாள் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.  இதில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்களுக்கு ஆசான் சரவணன்.ச அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சரஸ்வதி அலங்காரத்தில் துர்க்கை அம்மன், திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

  துர்க்கையம்மன் கோவில் தெரு நற்பணி மன்றத்தின் சார்பாக திருவண்ணாமலைய அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரிய கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி 6-ம் நாள் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.  துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திறனாய் பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேல மந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டி வழிபட்டனர். துர்க்கை அம்மன் கோவில் தெரு நற்பணி மன்றத்தைச் சார்ந்த சக்தி முருகன், உண்ணாமலை திருமண மண்டபம் உரிமையாளர் குடும்பதினர், அருண்குமார், அமுதா திருமண மண்டபம் உரிமையாளர் குடும்பத்தினர், சேகர், R.R.ரெசிடென்ஸ் & குருப்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர்,  சம்பத், ABGP இணை ஒருங்கிணைப்பாளர், ரவி, ராஜேந்திரன், அன்பு, வெங்கடேசன் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் தெருமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனனை வணங்கி ஆசி பெற்றனர். நவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு...

ஒரே நாளில் 4 கிராமங்களில் மருத்துவ முகாம், பிரதமர் 75வது பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் தொடர் மருத்துவ சேவைக்கு பாராட்டுக்கள் குவிக்கிறது

   திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணி மற்றும் தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கம் சார்பில் துரிஞ்சாபுறம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குண்ணியந்தல், வள்ளிவாகை, மாதுலம்பாடி மற்றும் பாலானந்தல் உள்ளிட்ட கிராமங்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவையாக கொண்டாடப்படும் நிகழ்வின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் வலி, கை, கால் வலி உள்ளிட்டவற்றுக்கு உடல் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொண்டு பலனடைந்தனர். துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கத்தின் நிறுவனர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் பிரச்சார பீரங்கி, உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், PhD, மருத்துவ அணி மாவட்ட பொதுச் செயலாளர் மருந்தாளுனர் கணேஷ் பாபு,  டாக்டர்.மதுமிதா.BSMS, ச...

500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாரதப் பிரதமர் 75வது பிறந்தநாள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்

  பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், கோவூர், கார்கோணம் பூத் எண். 20,21,22 பூதமங்கலம் பூத் எண். (29.30.31.32.33.34.35 ) ஊராட்சிகளில்  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ அவர்கள் தலைமையில், இதில் சிறப்பு விருந்தினராக தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் பிரச்சார பீரங்கி, உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன்,   டாக்டர்.மதுமிதா.BSMS, Staff nurse அமுதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளை இலவசமாக வழங்கி மருத்துவ முகாமினை சிறப்பான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடத்தினர்.     முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் எஸ்.விஜயகுமார்.  எஸ்.சங்கர்,  கிளைத் தலைவர் ஆ.பாண்டியராஜன், பி. பெருமாள், எல்.லட்சுமணன், கிளைதலைவர் எஸ்.சகாதேவன், இ.ஆனந்தன், கிளைத்தலைவர் ஆறுமுகம் ...

பிரதமரின் 75வது பிறந்த நாளை 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, 500 பனை விதைகள் நட்டு, தூய்மை பணி செய்து கொண்டாடிய பாஜகவினர்

  திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் ராந்தம், நம்மியந்தல் மற்றும் நூக்காம்பாடி ஊராட்சிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேவை இரு வாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.  துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன், ஒன்றிய துணைத் தலைவர் வி.வேடிராஜ், ஒன்றிய செயலாளர் டி.கார்த்தி, கிளைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் நூகாம்பாடி ஏ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சிறப்பு விருந்தினராக பாஜக மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர், உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், டாக்டர் எஸ்.திவ்யா எம்.பி.பி.எஸ், டாக்டர் எஸ்.மதுமிதா பி.எஸ்.எம்.எஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திரளான பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் வலி, கை, கால் வலி, வயிற்று வலி உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ பரிசோதனை செய...

1500 வீரர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி சர்வதேச கராத்தே போட்டிகளில் சந்தானம் அகாடமி மாணவர்கள் 8 பேர் முதலிடம் பிடித்து அசத்தல்

  சென்னையில் உள்ள ஐ.சி.எப் ( ICF) பழனிச்சாமி பல்நோக்கு விளையாட்டு அரங்கில் 27வது மாகாத்மா காந்தி சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.  இந்த போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா மற்றும் இலங்கை உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர்.     சர்வதேச கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற சந்தானம் அகாடமி மாணவர்களில் 8 வீரர்கள் முதல் பரிசுடன் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். அதேபோல் இரண்டாம் பரிசு 7 பேர், மூன்றாவது பரிசு 5 பேர் சான்றிதழ் கோப்பை ஆகியவற்றை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக பிரபல ஸ்டன்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். சந்தானம் தற்காப்பு கலை அகாடமி நிறுவனர், பயிற்சியாளர் ஷீகான் ச.சரவணன்  MBA ,MTech. சர்வதேச அளவிலா...