Skip to main content

Posts

Showing posts from May, 2024

ஆலுயரப் பற்றி எரிந்த யாகத் தீயில் 5 வயது புத்திரனாக அவதரித்த வன்னிய மகாராஜா, ஏராளமான பொதுமக்கள் நாடகத்தை கண்டு ரசித்தனர்

  திருவண்ணாமலை மாவட்டம், களஸ்தம்பாடி வட்டம், புதுசானாநந்தல் கிராமத்தில் ருத்ர வன்னிய நாடகம், சொர்ண காமாட்சி அம்மன் திருவிளையாடல் நடைபெற்று வருகிறது.  அதில் இன்று வன்னியன் பிறப்பு நாடகம் மிகச் சிறப்பான முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மன் வன்னிய மகா ராஜாவுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நாடகமாக நடைபெற்றது.  வன்னிய மகாராஜாவாக இ.ராமதாஸ் என்பவர் வேடம் அணிந்து யாகம் வேள்வி அமைத்து பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூட்டப்பட்ட அக்னி குண்டம் ஆலுயரப் பற்றி எரிந்த தீயில் இறங்கி ஓர் 5 வயது புத்திரனாக அக்னியில் அவதரித்தார். காமாட்சி அம்மனாக எல்.சிவா என்பவரும் சிறப்பான முறையில் நடித்தார். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாடகத்தை கண்டு ரசித்தனர். புதுசானானந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் வன்னிய நாடக ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.கே.செல்வம், ஏ.பரசுராமன், சி.திருப்பதி, கே.செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கே.பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் 5 நாட்கள் ருத்ர வன்னிய நாடகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புடவைகாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், கோணலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ புடவைகாரியம்மன் ஆலய ஜீர்ணோதாரண, அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  குன்னூராம் வீட்டு வகையறா குலதெய்வ குடும்பங்கள் மற்றும் கோணலூர் கிராம பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வை சிறப்பான முறையில் நடத்தினர்.  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், கோணலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ புடவைகாரியம்மன் ஆலய ஜீர்ணோதாரண, அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்வுகள் மங்கள இசை, அனுக்ஞை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜையுடன் துவங்கியது. பின்னர் மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி, தீபாராதனை, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு சிலைகளுக்க...

கழிவு நீரும், சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி நின்று சேரும், சகதியுமாக துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்து விட்டதாக பொய்யான பதில் அளித்துள்ள வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்துள்ள சமூக ஆர்வலர் மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளதால் பரபரப்பு

  திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சாக்கடை நீரும், கழிவு நீரும் குளம் போல் காட்சியளிக்கும் அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது. கழிவு நீரும், சாக்கடை நீரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் சேரும் சகதியுமான சாக்கடை நீர் வழிந்தோடும் பாதையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.  சாக்கடை நீர், கழிவு நீர், மழை நீர் ஆகியவற்றால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும்  நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியினர் அப்பகுதியைச் சுற்றி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுத்தொல்லை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆவூர் கிராமத்தில் வசித்து வரும் மூட்டை...

கானலாபாடி முத்தாலம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரையடுத்த கானலாபாடி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா, தீ மிதித்தல் திருவிழா விமரிசையாக நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. மலர் மாலைகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, தீபாராதனை நடந்தது.   விழாவையொட்டி பூங்கரகங்களை கோவிலிலிருந்து பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வீதி உலாவாக வந்து கோயிலை அடைந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்ரமணி தனது சொந்த செலவில் ரூ8.25 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் சகடை ஆகியவற்றை சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்துவதற்காக வழங்கினார்.   புதிய டிராக்டரில் முத்தாலம்மன், ரேணுகாம்பாள்,அம்மச்சார்அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மகன் சீனிவாசன் டிராக்டரை இயக்கியவாறு வீதி உலாவாக ஓட்டிச் சென்று கோயிலை அடைந்தார். இதையடுத்து பக்தர்கள் அவரவர் வீடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்ட கூழை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரைகளில் ஊற்றினர்.   இதையடுத்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ சத்குரு மடம் இளைஞ...

ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய 19ம் ஆண்டு வீர வன்னிய நாடகம், நாடகாசிரியர் மாயாசி தலைமையில் 7 நாட்கள் நடைபெறுகிறது

  திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ராந்தம் மதுரா அண்ணா நகர் ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய 19ம் ஆண்டு வீர வன்னிய நாடகம் நாடகாசிரியர் மாயாசி தலைமையில் 7 நாட்கள் நடைபெறுகிறது.  வன்னியன் பிறப்பு நாடகத்தில் கருங்காலி, நாயுருவி, நெய், வன்னிக்குச்சி தர்ப்பை, அருகம்புல் உள்ளிட்டவை கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஆளுயர யாகத் தீயில் வன்னியன் இறங்கிய பின்னர் திருக்கல்யாண நிகழ்வும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.  நாடகத்தை பார்வையிட்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ராந்தம் மதுரா அண்ணா நகர் கிராமத்தில் திருக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு வீர வன்னிய நாடகம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்வான வன்னியன் பிறப்பு நாடகம் இரவு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை வணங்கினர்.  வீர வன்னியன் செய்த யாகத்தில் கருங்காலி, நாயுருவி, நெய், வன்னிக்குச்சி, தர்ப்பை, அருகம்புல் உள்ளிட்டவை கொண்டு ஏற்படுத்தப்பட்ட யாகத்தில் தீமூட்...

19 ஆண்டு கோரிக்கையை ஒரே ஆண்டில் சாதித்து காட்டிய ஏ பி ஜி பி அமைப்பு, வெற்றி விழாவில் எம்.என்.சுந்தர் சிறப்புரை

திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேரடி ரயில் 3ம் தேதி காலை 4 மணிக்கு துவங்கியது. அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏபிஜிபி) அமைப்பினர் பூக்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.  இதன் வெற்றி விழா நிகழ்ச்சி திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த ஓராண்டு காலமாக ரயில் விட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தின் சார்பாக ஏவிஜிபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். அனைத்து நிர்வாகிகளும் இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.என் சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து ஏ பி ஜி பி தென் பாரத அமைப்புச் செயலாளர் எம்.என்.சுந்தர் , திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனிவாசன், இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத், வேங்கட ரமேஷ் பாபு, ராமமூர்...

பிஜேபி சார்பில் தண்ணீர் பந்தல் திறந்த மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன்

  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அஸ்வத்தாமன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோடையின் கொடுமை தணிக்கும் நீர் மோர் பந்தலை உலக சாதனையாளர் மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் பொதுமக்களுக்காக திறந்து வைத்தார், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீர்மோர் பருகி வெயிலில் தாகம் தனித்தனர் திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மற்றும் தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கம் இணைந்து  நீர் மோர் பந்தல் உலக சாதனையாளர் தர்ஷன் அவர்களால் திறக்கப்பட்டது. உலக சாதனையாளர் மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் கொடுக்க உலக சாதனையாளர் யமுனா ஹரி கோவிந்தன் நீர் மோரை பெற்றுக் கொண்டார். பின்னர் பழங்கள், இளநீர், பழரசம், நீர் மோர், பானகம், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் உலக சாதனையாளர் ஹனிஷ்குமார் அவர்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது. கிரிவலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் சுற்றுவட்டார பகுதியினரும் ஆர்வமுடன் வந்த...