Skip to main content

19 ஆண்டு கோரிக்கையை ஒரே ஆண்டில் சாதித்து காட்டிய ஏ பி ஜி பி அமைப்பு, வெற்றி விழாவில் எம்.என்.சுந்தர் சிறப்புரை



திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேரடி ரயில் 3ம் தேதி காலை 4 மணிக்கு துவங்கியது. அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏபிஜிபி) அமைப்பினர் பூக்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வழி அனுப்பி வைத்தனர். 


இதன் வெற்றி விழா நிகழ்ச்சி திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த ஓராண்டு காலமாக ரயில் விட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தின் சார்பாக ஏவிஜிபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். அனைத்து நிர்வாகிகளும் இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.என் சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து ஏ பி ஜி பி தென் பாரத அமைப்புச் செயலாளர் எம்.என்.சுந்தர் , திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனிவாசன், இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத், வேங்கட ரமேஷ் பாபு, ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், நாராயணசாமி வித்யாஸ்ரீ, போளூர் பகுதி ஏ பி ஜி பி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வெற்றி விழா கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டு திருவண்ணாமலை சென்னை கடற்கரை ரயில் விடும் கோரிக்கையில் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது குறித்து அனைவரும் பேசினர். முன்னதாக மங்கள இசையுடன் துவங்கிய வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த 19 ஆண்டு காலமாக திருவண்ணாமலையில் இருந்து மாநிலத்தின் தலைநகரமான சென்னையை இணைக்கும் நேரடி ரயில் விடுவதற்கு பலரும் பலகட்ட கோரிக்கையை வைத்து வெற்றி பெற முடியாத நிலையில் ஏபிஜிபி அமைப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் இந்த கோரிக்கையை வென்றெடுத்தது என்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று அனைவரும் ஏபிஜிபி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.