Skip to main content

கானலாபாடி முத்தாலம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரையடுத்த கானலாபாடி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா, தீ மிதித்தல் திருவிழா விமரிசையாக நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. மலர் மாலைகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

  விழாவையொட்டி பூங்கரகங்களை கோவிலிலிருந்து பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வீதி உலாவாக வந்து கோயிலை அடைந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்ரமணி தனது சொந்த செலவில் ரூ8.25 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் சகடை ஆகியவற்றை சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்துவதற்காக வழங்கினார்.

  புதிய டிராக்டரில் முத்தாலம்மன், ரேணுகாம்பாள்,அம்மச்சார்அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மகன் சீனிவாசன் டிராக்டரை இயக்கியவாறு வீதி உலாவாக ஓட்டிச் சென்று கோயிலை அடைந்தார். இதையடுத்து பக்தர்கள் அவரவர் வீடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்ட கூழை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரைகளில் ஊற்றினர்.

  இதையடுத்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ சத்குரு மடம் இளைஞரணி அன்னதான கமிட்டியின் சார்பாக 8ம் ஆண்டு அன்னதானமும் நடந்தது. விழாவில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம்,துணை செயலாளர் சோமாசிபாடி சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி தேவேந்திரன்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்,இளைஞரணி கிளை செயலாளர் அருளானந்தன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், அரிபாலன்,கிராம நிர்வாக அலுவலர் கண்ணாளன், வார்டு உறுப்பினர் தர்மராஜ்,நாட்டாண்மை ரேணு கவுண்டர் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி அங்குள்ள ரேணுகாம்பாள் கோயில் திடலில் அம்மனைப் பற்றிய நாடகமும்,நாளை முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

பட விளக்கம்

-------------------------

1)கீழ்பென்னாத்தூரையடுத்த

கானலாபாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் நடந்த கூழ்வார்த்தல்விழா, தீமிதித்தல் திருவிழா முன்னிட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் முத்தாலம்மன், ரேணுகாம்பாள்,அம்மச்சார்அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய சாமி சிலைகள் மேளதாளத்துடன் வீதி உலா நடந்தது.

2) பக்தர்கள் பூங்கரங்களை தலையில் சுமந்தவாறு பம்பை உடுக்கையுடன் வீதி உலாவாக வந்து கோயிலை அடைந்தனர்.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.