Skip to main content

கழிவு நீரும், சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி நின்று சேரும், சகதியுமாக துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்து விட்டதாக பொய்யான பதில் அளித்துள்ள வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்துள்ள சமூக ஆர்வலர் மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளதால் பரபரப்பு

 


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சாக்கடை நீரும், கழிவு நீரும் குளம் போல் காட்சியளிக்கும் அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது. கழிவு நீரும், சாக்கடை நீரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் சேரும் சகதியுமான சாக்கடை நீர் வழிந்தோடும் பாதையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. 

சாக்கடை நீர், கழிவு நீர், மழை நீர் ஆகியவற்றால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும்  நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியினர் அப்பகுதியைச் சுற்றி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுத்தொல்லை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆவூர் கிராமத்தில் வசித்து வரும் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி, பத்து ரூபாய் இயக்கத்தின் சமூக ஆர்வலர் முபாரக் அலி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியதற்கு கழிவு நீர் தேங்கி இருந்த பகுதியை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பொய்யான பதில்  அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் முபாரக் அலி மற்றும் அப்பகுதியினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பொய்யான பதில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சேரும், சகதியுமாக கழிவு நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கும் அவல நிலை காணப்படுகிறது, அந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். 

மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் நோயாளிகளும், பொதுமக்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேற்றில் சென்று வர மிகவும் சிரமப் படுவதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  பொய்யான பதில் தகவல் அளித்த சுகாதார அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சாக்கடை நீர் கழிவு, நீர் மற்றும் மழை நீர் ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுத்து கொசு உற்பத்தியை தடுத்து, துர்நாற்றத்தில் இருந்து அப்பகுதியை விடுவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவு நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கும் இடத்தை சரி செய்து விட்டதாக பொய்யான பதில் அளித்துள்ள வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்துள்ள சமூக ஆர்வலர் மீண்டும் சுகாதார நிலையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.