Skip to main content

3ம் ஆண்டு குடும்ப விழாவில் வறுமையில் வாடும் குடும்பத்திற்கு தையல் மெஷின் வழங்கி அமைதியாக சாதித்து வரும் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளை

 


திருவண்ணாமலை நகரில் அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதிக்க பிறந்த மருத்துவர் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் மூன்றாம் ஆண்டு குடும்ப விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டிஸ்கோ கே.ரவி, ஏ.சிவா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். எ.ரத்னா செந்தில்குமார், பி.சண்முகசுந்தரம், வி.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

முன்னாள் உதவி ஆய்வாளர் எம்.குப்புசாமி, ஜி.பூபதி, என்.மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். வேதா மகேந்திரன், பிஎஸ்என்எல் ஓய்வு எஸ்.செல்லதுரை, வி.சுப்பிரமணியன், எஸ்.ராம்குமார், ஏ டி எஸ் செல்வம், ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

தலைவர் மகாராஜன், என்.விஸ்வநாதன், சிறுகவிஞர் கே.காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஜி.காசிமணி ஆண்டறிக்கை வாசித்தார்.

ஆசிரியர் ஏ.கலைவாணி, ஜி.செல்வவிநாயகம், செயலாளர் எம்.ராஜேந்திரன், பேராசிரியர் சி.மெர்லின் சந்திரன், ஜி.தமிழ் முருகன், எம்.சார்லி சந்திரன் உள்ளிட்ட சிறப்பு பேச்சாளர்கள் அறக்கட்டளையின் வளர்ச்சி, கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.

இந்த விழாவில் கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் மிகுந்த வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு தையல் மெஷின் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவியாக இலவசமாக வழங்கி உதவி கரம் நீட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தையல் மிஷினை பெற்றவர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் சாதிக்க பிறந்த மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு குடும்ப விழாவில் அனைத்து குடும்ப உறவுகளும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் மகளிர் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒரே நிறத்திலான உடை அணிந்து ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தரம் வாய்ந்த பல்வேறு யோகாசனங்களை வேதாக கல்லூரி உரிமையாளர் மகேந்திரன் அவர்களின் செல்வமகள் செய்து காட்டி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம், யோகா, கராத்தே, சிலம்பம், பாடல், கவிதை, பேச்சு உள்ளிட்ட தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதியாக ஈகிள் என்.ஏழுமலை, என்.செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் நன்றியுரை ஆற்றினர். வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மருத்துவ சமூகம், தம்மை சுற்றியுள்ள மாற்று சமூகத்திற்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மகத்தான நோக்கத்தில் செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.