திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்து அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் அருள் பெற்றனர்.
முன்னதாக நேற்று மங்கள இசை, மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், கோபுர கலசங்கள் நிறுவுதல், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
இன்று காலை மங்கள இசையுடன் முதற்கடவுள் பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாஹுதியுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய விமான கலசம் மீது புனித நீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய ஸ்தாபகர் ஜி.கோனேரி கவுண்டர், ஸ்ரீ லட்சுமி சங்கர், நிர்வாக குழுவினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவினை சிறப்பான முறையில் நடத்தினர்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் ஸ்ரீ லட்சுமி அவர்களால் அருள்வாக்கு கூறப்படும்.





Comments
Post a Comment