Skip to main content

இருமொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகெங்கும் தலைமை பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர், துணைத் சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு

 


திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் உலகத் தமிழ் மொழி நாள் முன்னிட்டு கவியரங்கம், கருத்தரங்கம், மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழ்மொழி நாள் முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழின் சிறப்பு குறித்து அருமையாக பேசினர். பள்ளி மாணவி உலகத் தாய்மொழி குறித்து எண்ணற்ற திருக்குறளை சரளமாக கூறினர்.

மாவட்ட தமிழ் சங்க நிறுவனத் தலைவர், தமிழ் செம்மல் மதிப்புறு முனைவர் தமிழ் அரிமா பா.இந்திரராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து விழா பேருரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது, இரு மொழி கொள்கையை பின்பற்றியதால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ள சிறந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும், தமிழில் திருமணம் செய்திட வேண்டும், விளம்பரங்களில் தமிழை முன்னிலைப்படுத்துதல் தமிழர்கள் நமது கடமை என்று தெரிவித்தார்.

தமிழன்னை விருதாளர் தி.கு.செல்வமணி அவர்கள் திருக்குறள் ஒருவரி பொருள் நூலினை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்களின் திருக்கரத்தால் தமிழ் அரிமா ப.இந்திரராஜன் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் இனிமைத்தேன் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவிஞர் தேவிகாராணி தலைமையில் தமிழே என் சுவாசமே என்ற தலைப்பில் கவியரங்கமும், தமிழ்ச்செல்வன் பாவலர் ப.குப்பன் தலைமையில் தமிழறிஞர்களின் பார்வையில் தமிழின் சிறப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டு கவிதையையும் சிறப்பான பேச்சையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் உள்ளங்களை வெகுவாக கவர்ந்தனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.