Skip to main content

மக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 


திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பொதுமக்கள் பயணிக்க பாதுகாப்பற்ற சாலைகளாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருவதால் போளூர் பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பு அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி போளூர் நகரில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் ஒன்றிணைந்து திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் போளூர் புறவழி சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த பகுதியில் நிகழும் சாலை விபத்துகளால் போளூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல போதுமான பாதை வசதி இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக போளூர் நகரில் மெத்தனமாக பணிகள் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளால் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் வியாபாரிகளும் விவசாயிகளும் அல்லல்பட்டு வருவதால் விரைவாக ரயில்வே மேம்பால பணிகள் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் வாயிலாக எடுத்துரைத்தனர். 

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

போளூர் பகுதி மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

போளூர் தலைவர் ராணி சண்முகம், ராமஜெயம் செந்தில்குமார், பகவான் வெங்கடேசன், கல்பனா ஜுவல்லரி ரோஷன், செங்குணம் தலைவர் யாசிம், வெண்மணி தலைவர் கணேசன், ரெண்டேரிப்பட்டு தலைவர் கருணா, ஜெயின் ஜுவல்லரி ராஜேஷ், வினோத்,எஸ்.ஆர் சக்திவேல் , எஸ்.ஆர். ராமச்சந்திரன், கௌதம் குமார், கேபிள் ராஜா, லயன்ஸ் கிளப் மகேந்திரன், மனோஜ், அபிராமி சிவக்குமார், சாதனா வினோத், குன்னத்தூர் கிருஷ்ணராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும், விபத்துக்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.


பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

போளூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை சட்டமன்ற மானிய கோரிக்கைகளில் பலமுறை தெரிவித்தும் தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. 

போளூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் 15 தினங்களுக்குள் தமிழக அரசு பணிகளை முடிக்காவிட்டால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை பெற்று போளூர் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக சார்பில் போளூர் பகுதி மக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இங்கு நடத்தப்படும். 

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் திமுக அரசு போளூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால் அதற்கான பலனை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தருவார்கள் என செய்தியாளர்களிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.