Skip to main content

202ம் ஆண்டு கூத்தாண்டவர் தேர் திருவிழா, 33 அடி உயரம் கொண்ட தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

 



திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேடந்தவாடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் 202 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு மகாபாரத விரிவுரை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 20 நாட்களாக நடைபெற்று வந்தது.

கூத்தாண்டவர் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூத்தாண்டவர் ரத தேரோட்டம் இன்று நடைபெற்றது. 33 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர் தேறினை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவருக்கு இன்று காலை பூஜை மற்றும் யாகம் நடைபெற்றது. மும்பை, சென்னை, திருவண்ணாமலை, மேல்மலையனூர் பகுதிகளில் இருந்து வந்துள்ள திருநங்கைகள் குழுவினர் மற்றும் வேடந்தவாடி அருக்கார் குடும்பத்தார் இணைந்து பெண் அழைப்பு நிகழ்ச்சி மற்றும் கல்யாணமும் நடைபெற்றது.

விநாயகர் சிலை கொண்ட தேர் முதலில் செல்ல அதனை அடுத்து ஸ்ரீ கூத்தாண்டவர் ரதம் மற்றும் முத்தாலம்மன் தேர் உள்ளிட்டவை ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் தேர் ஊர்வலமாக வந்தது.

வேடந்தவாடி, மங்கலம், கருமாரப்பட்டி, அவலூர்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கூத்தாண்டவர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


வேடந்தவாடியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து குவிந்துள்ள திருநங்கைகள் கும்மியடித்து பாட்டு பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்


இன்று மாலை 6 மணி வரை கூத்தாண்டவர் ரதத்தின் ஊர்வலம் நடைபெற்று கூத்தாண்டவர் ஆலயத்தில் முடிவடைந்த பின்னர் திருநங்கைகளின் தாலியருக்கும் நிகழ்வு நடைபெறும்.


கூத்தாண்டவர் தேர் திருவிழாவை ஒட்டி பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.


அசம்பாவித சம்பவங்கள் தடுக்கும் விதமாக மங்கலம் காவல் நிலைய போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் அவசர மருத்துவ உதவிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.