Skip to main content

விளம்பர விடியா திமுக ஆட்சியில் தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறியதை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதைக்கு எதிரான மனித சங்கிலி போராட்டம்

 


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி போதைப் பொருட்கள் கடத்தலால் சமுதாயத்தை சீரழிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து கீழ்பென்னாத்தூர் அதிமுக நகர செயலாளர் ஓ.சி.முருகன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ஏ.கே.அரங்கநாதன் கண்டன உரையுடன் 500க்கும் மேற்பட்ட பெரும் திரளான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்ட மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை ஒழிப்போம், வாக்களித்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாச்சு, விடியா திமுக அரசின் அராஜகங்களை ஒழிப்போம்,

 போதைப் பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறிப்போச்சு என்பன உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், அதிமுக நகர அவைத்தலைவர் பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினர் கே பி கே சாந்தி, நகர இணை செயலாளர் சிவராமன், நகர பொருளாளர் கஜேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மகேஸ்வரன், மகளிர் அணி மல்லிகா மயில்வாகனன், வட்டச் செயலாளர்கள் ராணி, கதிரேசன், ராஜேந்திரன், கோவர்தனன், பாண்டியன், கோபி, நகர துணை செயலாளர் ஜே.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜீவன் ராம், ஐடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜ்குமார் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.


Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.