Skip to main content

ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்து உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 


திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவர் இராஜா ஹரிகோவிந்தன் மற்றும் அவருடைய மகன்கள் H.ஹனீஷ்குமார் மற்றும் H.தர்ஷன் ஆகியோரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு உலக சாதனைகளை புரிந்து பாராட்டுச் சான்று, பதக்கங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தீபமலை ஆன்மீகத் தொண்டு இயக்கம், தீபமலை மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலக்ட்ரோபதி மருத்துவமனை இணைந்து மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாக மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன் ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்து உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் இராஜா ஹரிகோவிந்தன் மற்றும் அவருடைய மகன்கள் H.ஹனீஷ்குமார் மற்றும் H.தர்ஷன் ஆகிய மூவரும் இணைந்து ஒருவர் மீது ஒருவராக அடுக்கு பத்மாசனத்தில் அமர்ந்து அவரது குடும்பமே ஒரு விழிப்புணர்வு குடும்பம் என்பதை நிரூபித்தனர்.

 இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதி அரசர் கிருபாநிதி தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜா ஹரிகோவிந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். லயன் ராஜ்குமார், வட ஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை வனச்சரகர் ஜி.பி.சரவணன் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார். 

யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்து உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.