சின்ன கோட்டங்கள் கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் உட்பட்ட மதுரா சின்ன கோட்டங்கள்கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீகெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம். ஊராட்சி மன்ற தலைவர் இரா. முருகன் தலைமையில்.வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை வழிபட்டனர்..
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கணபதி முருகர் . ஹோமம் . கோ பூஜை செய்யப்பட்டு நான்காம் கால பூஜைகள் செய்து பூர்ணாகி. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வழிபாடு செய்து கோவில் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
கெங்கையம்மன் கோவில் புணரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே மூன்று யாக சாலைகள் அமைப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில் ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கலசாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து பூ அலங்காரத்தால் பூஜையை வைக்கப்பட்டு மற்றும் தீபாரனை காண்பிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முன்னிலையில். கோவில் குழு அறங்காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு கலசங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊர் பொதுமக்கள். இளைஞர் அணி. மகளிர் அணி என. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Comments
Post a Comment