Skip to main content

திருமண அமைப்பாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

 


திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டத்தை பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் செங்கம் என்.ராஜா சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாநில செயல் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், ராமலட்சுமி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சரவணகுமார், சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சக்திராணி அனைவரையும் வரவேற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் நிர்வாகிகள் தமிழகம் முழுவதுமிருந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த பொதுக்குழுவானது கலைக்கப்பட்டு புதிதாக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அதன் நிர்வாகிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய திருமண அமைப்பாளர்களை தமிழக அரசின் அமைப்பு சாரா நல வாரியத்தில் சேர்க்க வேண்டும், திருமண அமைப்பாளர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதால் அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்தனர். 

வருகிற 2025ம் ஆண்டு பத்தாயிரம் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட பேரணியை சென்னையில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...