Skip to main content

பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது

 


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.  கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.செயலாளர் சுபாஷ், ஐ இ டி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், செந்தில், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில், பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சார்பில் கால்நடை தீவன அங்காடி திறப்பு விழா வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.

சர்வம் இயற்கை பண்ணை விவசாயி கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தர்மபுரியைச் சேர்ந்த இஐடி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் மற்றும் செயலாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.முருகன் அவர்கள் கலந்து கொண்டு கால்நடை தீவன அங்காடியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் விவசாயிகள் நலன் கருதி அரசு உதவியுடன் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாயிகள் உறுப்பினர்களாகி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர் ப.கி. தனஜெயன் தலைமை உரை ஆற்றுகையில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விலைப் பொருட்களை இடைத்தரகர் இன்றி அதிக லாபத்திற்கு விற்பனை செய்து மதிப்பு கூட்டி நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் லாபத்தை பங்கீடு வண்ணம் மத்திய அரசு நாபெட் உதவியுடன் பத்து கே திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ள பர்வதமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாயிகள் பங்குதாரராகி பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். தரமான விதைகள், பூச்சி மருந்துகள், உரங்கள் கால்நடை தீவனங்கள் ஆகியவற்றை பல கிராமங்களில் விற்பனை செய்ய குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் ஒன்றிய விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அன்பழகன், சித்ரா, மல்லிகா அர்ஜுனன் உள்ளிட்ட இயக்குனர்களும் தீபன விநியோகஸ்தர் குபேந்திரன் வெங்கடேசன் கணக்காளர் ரஜினி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக அசோக் குமார் நன்றி உரையாற்றினார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...