திருவண்ணாமலை நகரம் வேங்கிக்கால் குளத்துமேட்டு தெருவில் வசந்தா(எ) ஆயிஷா (வயது 56) தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான வீட்டை புருஷோத்தமன் மற்றும் அபிஷேக் என்பவர்கள் போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை புருஷோத்தமன், அபிஷேக், பாபு, விஷ்ணு, சௌமியா, செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட புருஷோத்தமனின் குடும்பத்தினர், நண்பர்களுடன் திரண்டு சென்று வசந்தாவின் வீட்டுக் கதவை எட்டி உதைத்து உள்ளே புகுந்து வீச்சருவாள் மற்றும் இரும்பு ராடால் வசந்தா மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வீச்சருவாள் மற்றும் இரும்புராடால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செல்வியின் கழுத்தில் வெட்ட முயற்சித்தபோது செல்வி தடுத்ததில் கத்தி திரும்பியதால் செல்வியின் தலை மற்றும் கையில் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயமடைந்துள்ளார். பலத்த காயமடைந்த வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அத்தோடு விடாமல் புருஷோத்தமன் தனது ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது குடும்பத்தினருடன் சென்று வசந்தா குடியிருந்த மெத்தை வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளார்.
இதில் ஆயிஷா தனது வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூபாய் 30,000 உள்ளிட்டவற்றை புருஷோத்தமன் அபிஷேக் ஆகியோர் திருடி கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் உள்ள டிவி மற்றும் பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை அனைத்து விட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை தரைமட்டமாக்கி சொந்த மகனே தாய் குடி இருந்த வீட்டை தரைமட்டம் ஆக்கியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் வசந்தா புகார் மனு அளித்துள்ளார். வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் தரைமட்டமாக்கி தனக்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கச் செய்து விட்டனர். எனவே குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மகனே தாய் குடி இருந்த வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் அடியாட்களை வைத்து தரைமட்டமாக்கி தாயை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு சொந்தமான வீட்டை புருஷோத்தமன் மற்றும் அபிஷேக் என்பவர்கள் போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை புருஷோத்தமன், அபிஷேக், பாபு, விஷ்ணு, சௌமியா, செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட புருஷோத்தமனின் குடும்பத்தினர், நண்பர்களுடன் திரண்டு சென்று வசந்தாவின் வீட்டுக் கதவை எட்டி உதைத்து உள்ளே புகுந்து வீச்சருவாள் மற்றும் இரும்பு ராடால் வசந்தா மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வீச்சருவாள் மற்றும் இரும்புராடால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செல்வியின் கழுத்தில் வெட்ட முயற்சித்தபோது செல்வி தடுத்ததில் கத்தி திரும்பியதால் செல்வியின் தலை மற்றும் கையில் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயமடைந்துள்ளார். பலத்த காயமடைந்த வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அத்தோடு விடாமல் புருஷோத்தமன் தனது ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது குடும்பத்தினருடன் சென்று வசந்தா குடியிருந்த மெத்தை வீட்டை இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளார்.
இதில் ஆயிஷா தனது வீட்டில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூபாய் 30,000 உள்ளிட்டவற்றை புருஷோத்தமன் அபிஷேக் ஆகியோர் திருடி கொண்டு சென்றுள்ளனர். வீட்டில் உள்ள டிவி மற்றும் பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை அனைத்து விட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டை தரைமட்டமாக்கி சொந்த மகனே தாய் குடி இருந்த வீட்டை தரைமட்டம் ஆக்கியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் வசந்தா புகார் மனு அளித்துள்ளார். வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் தரைமட்டமாக்கி தனக்கு தங்குவதற்கு இடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கச் செய்து விட்டனர். எனவே குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மகனே தாய் குடி இருந்த வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் அடியாட்களை வைத்து தரைமட்டமாக்கி தாயை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Comments
Post a Comment