Skip to main content

சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டி மகா ருத்ர யாகம் டிசம்பர் மாதம் 24 25 26 ஆம் தேதிக்கு மாற்றம், பாஜக மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

 

பாரதப் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமரவும், சனாதன தர்மம் தழைத்து ஓங்கவும் வருகிற நவம்பர் 21 முதல் 23 வரை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் பட்டியல் அணி பாஜக மாவட்ட  தலைவர் R.விஜயராஜ் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது.

உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் மூலமாக நடைபெறுகின்ற மகா ருத்ர யாகம் வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாதம் தொடர் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிசம்பர் மாதம் 24 25 26 ஆகிய மூன்று நாட்களில் மகா ருத்ரையாக ஆனது நடைபெறும் என்று தள்ளி வைக்கப்படுகிறது.

நவம்பர் மாதம் 23ஆம் தேதி மகா ருத்ர யாகத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும்.

மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால் சாதுக்களும் சன்னியாசிகளும் பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டியும், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பாரதப் பிரதமராக அரியணையில் அமர வேண்டி, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஆன்மீகத் தளத்தில் அருணாச்சலேஸ்வரர் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயில் வளாகத்தில் மகா ருத்ர யாகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்ட தலைவர் R.விஜயராஜ் அவர்கள் தலைமையில் மகா ருத்ர யாகம் நடைபெற உள்ளது. இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக மகா ருத்ர யாகத்தில் பங்கேற்க உள்ளார்.

உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பின் மூலமாக நடைபெறுகின்ற மகா ருத்ர யாகத்தினை கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் வியாச பரமாத்மா மடத்தின் சத்குரு வியாசானந்தா சிவயோகி மற்றும் திருவண்ணாமலை ஓம் குடில் டிரஸ்ட் சிவனடியார் சிவ வெற்றிவேல் ஆகியோர் மகா ருத்ர யாகத்தை நடத்தி வைக்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.

மகா ருத்ர யாகம் நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய பட்டியலனி மாவட்ட தலைவர் R.விஜயராஜ் கூறுகையில், சனாதன தர்மத்தை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும், சனாதன தர்மம் உலகெங்கும் தழைத்து வளர வேண்டும்,  பாரத அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமர வேண்டும். இந்த யாகத்திற்கு ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர்கள், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள், ஆந்திரா கர்நாடகா தமிழகம் கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த யாகத்தை சிறப்பிக்க உள்ளனர். அனைத்து பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று அனைவரையும் வரவேற்கிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜயராஜ் அவர்கள் கூறினார்.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

எம்.எல்.ஏ உத்தரவிட்ட பிறகும் உள்ளூர் திமுக பிரமுகர்களின் தூண்டுதலால் பாதை வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகளால் 2 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம், பாதையை திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை

  திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு  அகற்றப்பட்டு அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டு தற்போது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காளியம்மன் கோவில் தெரு 50 குடும்பத்தினை சேர்ந்தவர்களும் பொது பாதை ஏற்படுத்தி தரக்கோரி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நேரில் வந்து பார்வையிட்டு பொதுபாதை அமைத்து தர தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டு சென்றார். இருப்பினும் உள்ளூரில் உள்ள திமுக பிரமுகரின் தூண்டுதலால் ஒருவர் அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தகர சீட் போட்டு அடைத்து மூடிவிட்டார். இதனால் காளியம்மன் கோவில் தெரு ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொது வழியில்லாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி தான் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்க...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.