Skip to main content

பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரையூர் கிராமத்தில் பட்டியலணி மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில், ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி  ஏற்பாட்டில் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்  பாலசுப்பிரமணி, பட்டியல அணி மாநில துணைத்தலைவர் குட்டி தீனதயாளன், மாநில பட்டியல அணி செயலாளர் பாண்டியராஜன், வேலூர் கோட்ட பொறுப்பாளர் ஆனந்தன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவசங்கரன், கவிதா பிரதீஷ், மாவட்ட செயலாளர் குமார் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மகளிர் அணி தமிழரசி, பட்டியல் அணி பொதுச் செயலாளர் வெங்கடேசன், அலெக்ஸ், மற்றும் திரளான பொதுமக்களும் கட்சியின் நிர்வாகிகளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  பட்டியலணி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி வீட்டில் அனைத்து நிர்வாகிகளும் மதிய விருந்து கலந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டனர்.

  மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் வேட்டவலம் அருகே நாரையூர் கிராமத்தில் நடைபெற்ற பட்டியலணி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

இதில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் , பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரதமரின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இன்று இரண்டாவது இடமாக திருவண்ணாமலை அடுத்துள்ள கிளியாப்பட்டு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களுக்கு தேவையான மத்திய அரசு திட்டங்கள் நேரடியாக வந்து சேருவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலின மாவட்ட தலைவர் விஜயராஜ் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

திருமண அமைப்பாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில‌ BMS உடன்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் ‌ திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க‌ வேண்டி‌ தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‌BMS‌ ல்‌ இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

34 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி

  திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் (1986 - 1991) ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் அற்புத நிகழ்வாக சிறப்பான முறையில் நடைபெற்றது.  தாங்கள் பயின்றபோது பாடம் எடுத்த இருபால் ஆசிரியர்களை நிகழ்ச்சியில் சிறப்பான வரவேற்பு அளித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் பயிற்றுவித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை பெருமிதத்துடன் தங்கள் வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் மனதில் அலைமோதும் எண்ணங்களை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். செயற்குழு உறுப்பினர்கள் ரேகா, கற்பகம், சிவக்குமார், சுரேஷ், சலீம், கார்த்தி, கண்ணன், முத்து உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

  திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து ...